செய்திகள் :

காட்பாடி: புதிய சாலையைச் சேதப்படுத்திய கோயில் விழாக்குழு; கொதிக்கும் மக்கள்; பின்னணி என்ன?

post image

வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கழிஞ்சூர் பகுதியில், கோயில் திருவிழாவையொட்டி மே 2-ம் தேதி மாடு விடும் விழா நடைபெறவிருக்கிறது.

இந்த ஒருநாள் விழாவுக்காக, சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய பிரதான தார்ச்சாலையின் இருபுறமும் நீண்டதூரத்துக்குக் குழிகளைத் தோண்டி தடுப்பு அரண்களை அமைத்து வருகிறார்கள் விழாக் குழுவினர்.

காளைகள் ஓடுபாதைக்காக இந்த பிரதான தார்ச்சாலையைத் தயார்ப்படுத்தி வருவது, பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சாலையின் இருபுறங்களையும் ஒட்டியபடி வீடுகளும் அமைந்திருக்கின்றன.

சேதப்படுத்தப்பட்ட புதிய தார்ச்சாலை

சாலையோரம் மண்பாதையும் கிடையாது. இதன் காரணமாகத்தான் சமீபத்தில் போடப்பட்ட தார்ச்சாலையை முழுவதுமாக ஆக்கிரமித்து இருபுறமும் கடப்பாரையால் குழிகளைத் தோண்டி சேதப்படுத்தியிருக்கின்றனர்.

இந்த விழாவை ஊருக்கு வெளியே பொதுவெளியில் நடத்தியிருக்கலாம். யாருக்கும் இடையூறு ஏற்பட்டிருக்காது.

தார்ச்சாலையும் சேதப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. இப்போதே கம்புகள் நடப்பட்டுத் தடுப்புகள் கட்டப்பட்டுவிட்டதால் சாலையைப் பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் சுற்றிக்கொண்டு செல்கின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் தார்ச்சாலையைச் சேதப்படுத்திய விழாக்குழுவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வலியுறுத்தியிருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

சாதிவாரி கணக்கெடுப்பு: "பீகார் தேர்தல் அரசியல் லாபத்துக்காக..." - முதல்வர் ஸ்டாலின் சொல்வது என்ன?

நீண்ட கால எதிர்க்கட்சிகளின் அழுத்தத்துக்குப் பிறகு, சாதிவாரி கணக்கெடுப்பு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து நடத்தப்படும் என இன்று கேபினட் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.மத்திய அரச... மேலும் பார்க்க

"சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்" - மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்வின் அறிவிப்பு என்ன?

வரவிருக்கும் பிரதான மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப்படும் என இன்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்."அர... மேலும் பார்க்க

Trump 100: அதிபராகி 100 நாட்களை முடிக்கும் ட்ரம்ப்பின் 10 அதிரடி அறிவிப்புகள் - ஒரு பார்வை!

அமெரிக்க அதிபர் என்று ட்ரம்ப்பைச் சொல்வதை விட, அதிரடி அதிபர் என்று கூறினால் சரியாக இருக்கும்.ஆம்... கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி, 'நான், டொனால்ட் ஜான் ட்ரம்ப்...' என்று இரண்டாவது முறையாகப் பதவியேற்றதி... மேலும் பார்க்க

"தீண்டாமை குறியீடு... இனி `காலனி' என்ற சொல் அரசு ஆவணங்களிலிருந்து நீக்கப்படும்" - ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டில் இன்றளவும் மக்கள் வாழும் பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் வசிக்கும் பகுதியை மட்டும் சாதிய அடையாளத்தின் அடிப்படையில் `காலனி' என்று அழைக்கப்படுகிறது. ஊர்ப் பகுதி - சித்தரிப்புப் படம்அரச... மேலும் பார்க்க

'மேலே பாம்பு, கீழே நரிகள், குதித்தால் அகழி...' - சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

கடந்த மாதம் மார்ச் 14-ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் ஸ்டாலின் உரையாற்றி இருக்கிறார். திராவிட மாடல் அரசில் தமிழ்நாடு ... மேலும் பார்க்க