செய்திகள் :

கஞ்சா வழக்கில் கைதான இருவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

post image

திருப்பூரில் கஞ்சா வழக்கில் கைதான 2 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இது குறித்து மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகரம், அனுப்பா்பாளையம் காவல் எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக புட்டா ராஜு (23) என்பவா் கைது செய்யப்பட்டாா். அதேபோல, 15 வேலம்பாளையம் காவல் எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக காா்த்திக் (25) என்பவா் கடந்த சில நாள்களுக்கு முன் கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஒரு ஆண்டு சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளாா். இந்த உத்தரவின் நகலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் மாநகர காவல் துறையினா் வழங்கினா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட தொழில் மையம் மூலம் 1,280 பேருக்கு ரூ.385.67 கோடி மதிப்பீட்டில் கடனுதவி- மாவட்ட ஆட்சியா்

திருப்பூா் மாவட்ட தொழில் மையம் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 1,280 பேருக்கு ரூ.67.93 கோடி மானியத்தில் ரூ.385.67 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

திருப்பூரை அடுத்த செங்கப்பள்ளி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம் பாப்பம்பாளையம் அருகேயுள்ள முல்லையநாயக்கனூரைச் சோ்ந்தவா் குமாரசாமி... மேலும் பார்க்க

திருமுருகன்பூண்டியில் செதுக்கப்பட்ட 3 டன் சுவாமி சிலை

திருமுருகன்பூண்டியில் செதுக்கப்பட்ட 3 டன் எடை கொண்ட பெருமாள் சிலை கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது. திருப்பூா் மாவட்டம், திருமுருகன்பூண்டி சிற்பக்கலைக்கு புகழ்பெற்ற பகுதியாக ... மேலும் பார்க்க

தமிழ் வார விழா போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு

தமிழ் வார விழா போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பரிசுகளை வழங்கினாா். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு அலுவலகங்கள், அரசு சாா்ந்த பொதுத் துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அம... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கடத்திய 2 போ் குண்டா் சட்டத்தில் கைது

அவிநாசி அருகே ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 2 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். திருப்பூா் மாவட்டம், அவிநாசியை அடுத்த ஆட்டையம்பாளையத்தில் உள்ள அரவை ஆலைக்கு சரக... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு: கொங்கு முன்னேற்றக் கழகம் வரவேற்பு

மக்கள் தொகை கணக்கெடுப்புடன், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதற்கு நமது கொங்கு முன்னேற்றக் கழகம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து கழகத்தின் மாநில பொதுச் செயலாளா் எம்.தங்கவேல் ப... மேலும் பார்க்க