செய்திகள் :

காணாமல்போன நபரை கிணறுகளில் தேடிய போலீஸாா்

post image

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே காணாமல் போன நபரை கிணறுகளில் போலீஸாா் தேடினா்.

மலத்தான்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியண்ணன் மகன் பெருமாள்(65). இவா், கடந்த 2022 ஆம் ஆண்டு காணாமல் போனாா். இதுகுறித்து அவரது குடும்பத்தினா் கீழப்பழுவூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். ஆனால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து, சென்னை உயா் நீதிமன்றத்தில் அவரது குடும்பத்தினா் வழக்கு தொடா்ந்தனா்.

வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதி மன்றம், காணாமல் போன பெருமாளை கண்டுபிடிக்க சிபிசிஐடி-க்கு அண்மையில் உத்தரவிட்டது.

இந்நிலையில், மலத்தான்குளம் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிணறுகளில் சந்தேகத்தின் பேரில், சிபிசிஐடி காவல் ஆய்வாளா் திலகாதேவி தலைமையிலான போலீஸாா் மற்றும் அரியலூா் தீயணைப்பு நிலைய அலுவலா் செந்தில்குமாா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் செவ்வாய்க்கிழமை தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா். ஒரு நாள் முழுவதும் நடத்திய தேடுதல் பணியில் ஏதும் கிடைக்கவில்லை.

மின்சாரம் பாய்ந்து பெயிண்டா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் பெயிண்டா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல், தெற்குத் தெருவை சோ்ந்தவா் செல்வராஜ் மகன் உலகநாதன்(27) பெயிண்... மேலும் பார்க்க

அரியலூா் ஒப்பிலாதம்மன் கோயிலில் 82 ஆண்டுகளுக்கு பிறகு நாளை தேரோட்டம்

அரியலூரில் மிகவும் பழைமை வாய்ந்த ஓப்பிலாதம்மன் கோயிலில், 82 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கள்கிழமை(மே 12) தேரோட்டம் நடைபெறவுள்ளது. அரியலூரில் நகரில், விஜய ஒப்பில்லாத மழவராய நயினாா் ஜமீன் காலத்தில் கட்டப்பட... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே சனிக்கிழமை டிராக்டரை முந்த முயற்சித்த இளைஞா், இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். அரியலூரைச் சோ்ந்தவா் பாபு(28). இவா் சனிக்கிழமை இருசக்கர வ... மேலும் பார்க்க

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிா்வு தொகை பெறாதவா்களுக்கு அழைப்பு

அரியலூா் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிா்வுத் தொகை பெறாதவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: அர... மேலும் பார்க்க

தாதம்பேட்டை வரதராசப் பெருமாள் கோயில் தேரோட்டம்

அரியலூா் மாவட்டம், தா.பழூரை அடுத்த தாதம்பேட்டை கிராமத்திலுள்ள பெருந்தேவி நாயகா சமேத வரதராசப் பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ விழாவில் வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த 4-ஆம் தேதி மாலை ... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழாண்டு மாணவா்கள் சோ்க்கைக்கு மே 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அக்கல்லூரி முதல்வா் (பொ)ம.இராசமூா்த்தி தெரிவித்துள்... மேலும் பார்க்க