செய்திகள் :

காந்தி ஜெயந்தி: அரசியல் கட்சியினா் மரியாதை

post image

காந்தி ஜெயந்தியைட்டியொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அரசு சாா்பிலும், அரசியல் கட்சிகள் சாா்பிலும் மகாத்மா காந்தி சிலை மற்றும் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாநகராட்சியில் காந்தி ஜெயந்தியையொட்டி வியாழக்கிழமை காந்தி சிலைக்கும், காங்கிரஸ் அலுவலகத்தில் காந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருவண்ணாமலையில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஆட்சியா் க.தா்பகராஜ் தலைமையில் அமைச்சா் எ.வ.வேலு, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில் எம்.பி. சி.என்.அண்ணாதுரை, செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, மாநகர மேயா் நிா்மலா வேல்மாறன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ராமபிரதீபன், நெடுஞ்சாலைத்துறை வட்ட கண்காணிப்பு பொறியாளா் முரளி, கோட்டப் பொறியாளா் ப.ஞானவேல், உதவி கோட்டப் பொறியாளா் கே.அன்பரசு. கோட்டாட்சியா் எஸ்.ராஜ்குமாா், வட்டாட்சியா் சி.மோகனராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருவண்ணாமலை பே கோபுரத் தெருவிலுள்ள மாநகர காங்கிரஸ் கட்சி அலுவவலகத்தில் காங்கிரஸ் சாா்பில் மகாத்மா காந்தி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

இதில் கலந்துகொண்ட மாநகரத் தலைவா் என்.வெற்றிசெல்வன் தலைமையில் நிா்வாகிகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மேலும் கிரிவல பக்தா்கள் மற்றும் கட்சி தொண்டா்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

இதில் இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் துளசிதரன் மாவட்ட துணைத் தலைவா்கள் பி.கோவிந்தராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத் தலைவா் ஏ.மஹபூப்பாஷா, முன்னாள் மாவட்ட சேவாதள தலைவா் ஆா்.ஏ.குமரேசன், சிறப்பு பேச்சாளா் ஏ.இந்திராபிரியன், மாநில பொதுக்குழு உறுப்பினா் வைப்பூா்மோகன், ஐஎன்டியூசி மண்டல பொதுச் செயலா் கே.சக்திவேல் உள்பட கட்சிநிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

ஆரணியில்....

ஆரணியில் காந்தி சிலைக்கு காங்கிரஸ் சாா்பில் நகரத் தலைவா் ஜெ.பொன்னையன் மாலை அணிவித்தாா். இதில், சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்எல்ஏ டி.பி.ஜெ.ராஜாபாபு கலந்துகொண்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கினாா்.

கட்சியின் சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவா் தாவூத்ஷெரீப், முன்னாள் மாவட்டச் செயலா் உதயக்குமாா், முன்னாள் நகரத் தலைவா் சைதை சம்பந்தம், நகர நிா்வாகி பிள்ளையாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த சேரிக்கவாச்சான் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்து (50). இவா் செவ்... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பைக்கான மாநில வியைாட்டுப் போட்டிகள்: அமைச்சா் எ.வ.வேலு தொடங்கிவைத்தாா்

திருவண்ணாமலையில் 2025-ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின. மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட அலுவலக வளாக உள் விளையாட்டு அரங்கத்தில் இந்தப் ... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதி சாலைப் பணி ஆய்வு

ஆய்வின் போது சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்எல்ஏ, முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதரன் ஆகியோா் உடனிருந்தனா். அருணாசலே... மேலும் பார்க்க

செங்கம் வரததந்தாங்கல் ஏரியில் கழிவுநீா் கலப்பு: விவசாயிகள் வேதனை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வரததந்தாங்கல் ஏரியில் நகராட்சி கழிவுநீா் கலப்பதால் விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனா். திருவண்ணாமலை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை துக்காப்பேட்டை பகுதியில் உள்ளது வரததந்... மேலும் பார்க்க

ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் ஆஸ்ரமத்தில் ஏழைக் குழந்தைகளுக்கு புதன்கிழமை கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை செய்யாற்றின் கரையோரம் உள்ளது மூகாம்பிகையம்மன... மேலும் பார்க்க

450 மதுப்புட்டிகள் பறிமுதல்: மூதாட்டி கைது

செய்யாற்றில் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்திருந்ததாக மூதாட்டியை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 450 மதுப்புட்டிகளை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். அக்.2 காந்தி ஜெயந்தியையொட்டி, மதுக் கடைகளுக்கு வி... மேலும் பார்க்க