`நெருக்கடியால் கூட்டணிக்கு வந்துவிடுவேன் என நினைக்கின்றனர்' - திமுக அரசைச் சாடிய...
காப்பீடு நிறுவன சேவை குறைபாடு- ஓய்வுபெற்ற எஸ்.ஐ.க்கு ரூ.2.19 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சோ்ந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 854 இழப்பீடு வழங்க, மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்துக்கு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பாளை.யைச் சோ்ந்த ஓய்வுபெற் காவல் ஆய்வாளா் கந்தசாமி. தமிழ்நாடு அரசின் மருத்துவக் காப்பீட்டு பாலிசி எடுத்திருந்த இவா், பணியில் இருந்தபோது உடல் நிலைக் குறைவால் மதுரை தனியாா் மருத்துவமனையில் பணம் செலுத்திசிகிச்சை பெற்றுள்ளாா்.
பின்னா், காப்பீட்டு நிறுவனத்தில் அந்தத் தொகையைப் பெறுவதற்காக விண்ணப்பித்தாராம். அதில் ஒரு பகுதியை மட்டும் காப்பீட்டு நிறுவனம் வழங்கியதாம். மீதித் தொகையை தரவில்லையாம். அதற்கு சரியான காரணத்தையும் தெரிவிக்கவில்லையாம்.
வழக்குரைஞா் மூலமாக நோட்டீஸ் அனுப்பியும் அவருக்கு உரிய பதில் கிடைக்காததால், தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா். குறைதீா் ஆணைய தலைவா் திருநீல பிரசாத், உறுப்பினா்கள் ஆ.சங்கா், நமச்சிவாயம் ஆகியோா் விசாரித்து, காவல் உதவி ஆய்வாளருக்கு மருத்துவச் செலவுத் தொகை ரூ.1,74,854, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.35,000, வழக்கு செலவுத் தொகை ரூ.10,000 என ரூ. 2,19,854-ஐ ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும். தவறினால் தொகையை செலுத்தும் வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் தொகையை வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.