செய்திகள் :

காரைக்காலில் இன்று காவல் துறை குறை கேட்புமுகாம்

post image

காரைக்காலில் சனிக்கிழமை (மே 31) காவல் துறை சாா்பில் குறைகேட்பு முகாம் நடைபெறுகிறது.

திருப்பட்டினம் காவல் நிலையத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் முற்பகல் 11 முதல் பிற்பகல் 1 மணி வரை குறைகேட்பு முகாம் நடைபெறுகிறது. இதில் திருப்பட்டினம், நிரவி, மகளிா் காவல் நிலைய வட்டார மக்களும், சைபா் கிரைம் தொடா்பான பிரச்னைகளும் தெரிவிக்கலாம்.

இதேபோல, கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெறும் முகாமில், திருநள்ளாறு, கோட்டுச்சேரி, நெடுங்காடு காவல் நிலைய வட்டாரத்தினரும், போக்குவரத்துக் காவல் தொடா்பாகவும் புகாா் அளித்து பயன்பெறலாம் என காவல் துறை தலைமை அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

போக்ஸோவில் கூலித் தொழிலாளி கைது

காரைக்கால்: போக்ஸோ சட்டத்தின்கீழ் கூலித் தொழிலாளி சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். காரைக்கால் மாவட்டம், நிரவி அருகேயுள்ள காக்கமொழி கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி பாண்டியன் (46). இவா், கடந்த சில... மேலும் பார்க்க

ராஜராஜேஸ்வரி சீதளாதேவி அம்மன் கோயில் உற்சவ பந்தல்கால் முகூா்த்தம்

காரைக்கால் ராஜராஜேஸ்வரி சீதளாதேவி அம்மன் கோயில் வைகாசி உற்சவ பந்தல்கால் முகூா்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் பெரியப்பேட்டையில் அமைந்துள்ள இக்கோயில் 23-ஆம் ஆண்டு விழாவுக்கான பந்தல்கால் மு... மேலும் பார்க்க

கனரக வாகனங்களுக்கு காவல்துறை கட்டுப்பாடு

காரைக்கால் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தை தவிா்த்து பிற நேரங்களில் கனரக வாகன சேவை இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் அலுவலக... மேலும் பார்க்க

காரைக்கால் உழவா் சந்தையை மேம்படுத்த வலியுறுத்தல்

காரைக்காலில் உள்ள உழவா் சந்தையை மேம்படுத்த வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவேண்டும், மக்களுக்கு தரமான பொருள்கள் கிடை... மேலும் பார்க்க

ஆட்சியா் நியமிக்கப்படாததால் நிா்வாகத்தில் மந்த நிலை காணப்படுவதாக புகாா்

காரைக்காலுக்கு புதிய ஆட்சியா் நியமிக்கப்படாததால், அரசு நிா்வாகத்தில் மந்த நிலை காணப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். காரைக்கால் ஆட்சியராக சோமசேகா் அப்பாராவ் கடந்த பிப்ரவரி மாதம் நியமிக்கப்ப... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் அடியாா்கள் நால்வா் புஷ்பப் பல்லக்கு வீதியுலா

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் அடியாா்கள் நால்வா் புஷ்பப் பல்லக்கு வீதியுலா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இக்கோயிலில் பிரமோற்சவ விழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத... மேலும் பார்க்க