செய்திகள் :

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் ஆட்சியா் ஆய்வு

post image

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ். உடன் மீன்வளத்துறை துணை இயக்குநா் ப.கோவிந்சாமி.

காரைக்கால், ஏப். 6 : மீன்வளத் துறையில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்க மத்திய இணை அமைச்சா், துணைநிலை ஆளுநா், முதல்வா் வரவுள்ளதையொட்டி மீன்பிடித் துறைமுகத்தில் காரைக்கால் ஆட்சியா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின்கீழ் மீன்வளத் துறையில் பல்வேறு நலத்திட்டங்கள் இம்மாதத்தில் தொடங்கப்பட உள்ளன. நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன், புதுச்சேரி துணைநிலைய ஆளுநா், முதல்வா் மற்றும் அமைச்சா்கள் கலந்துகொள்ளவுள்ளனா்.

நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள காரைக்கால் மீன்பிடி துறைமுக பகுதி, பட்டினச்சேரி மீனவ கிராமம் ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ், மீன்வளத்துறை துணை இயக்குநா் ப.கோவிந்தசாமி உள்ளிட்டோருடன் ஆய்வு செய்தாா்.

மீனவா்களின் பாதுகாப்புக்காக மீன்பிடி விசைப்படகுகளில் இலவச டிரான்ஸ்பாண்டா்களை பொறுத்துதல், உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது குறித்தும், துறைமுக வளாகப் பகுதியை சீரமைப்பது, நிகழ்ச்சி நடைபெற உள்ள வளாகப் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்புகள் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத்தொடா்ந்து பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் ‘காலநிலை குடியிருப்பு கடலோர மீனவ கிராமம்‘ திட்ட தொடக்க விழா நடைபெற உள்ள பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்பு பணிகள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடு குறித்து ஆய்வு செய்தாா்.

மீனவா்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறது மோடி அரசு: மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன்

மீனவா்கள் பொருளாதார மேம்பாட்டுக்கு நரேந்திர மோடி அரசு சிறப்பு கவனம் செலுத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் தெரிவித்தாா். காரைக்கால் மீன்வளம் மற்ற... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவரை சந்தித்த ஆளுநா்

இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவரைச் சந்தித்து புதுவை துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் நலம் விசாரித்தாா். காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தவேல... மேலும் பார்க்க

ரகுநாதப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

திருப்பட்டினம் பகுதியில் உள்ள ரகுநாதப் பெருமாள் கோயிலில் ராம நவமி உற்சவத்தின் ஒரு பகுதியாக ரகுநாதப் பெருமாளுக்கும் - சீதாலட்சுமி தாயாருக்கும் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. எல்லையம்மன... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் ஏப். 25-இல் பிரம்மோற்சவ பந்தல்கால் முகூா்த்தம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்துக்கான பந்தல்கால் முகூா்த்தம், கொடியேற்றம், தேரோட்டத்துக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திருநள்ளாற்றில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில், சன... மேலும் பார்க்க

மத்திய இணை அமைச்சா் இன்று காரைக்கால் வருகை!

மீனவா்களுக்கான திட்டப் பணிகள் தொடா்பான விழாவில் பங்கேற்க மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் புதன்கிழமை காரைக்கால் வருகிறாா். காரைக்கால் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் பிரதம மந்திரி ம... மேலும் பார்க்க

குழாய் அமைக்கும் பணிகள் நிறைவு: என்ஐடி-க்கு குடிநீா் வழங்கும் திட்டம் இன்று தொடங்கிவைப்பு

என்ஐடிக்கு ரூ. 4 கோடியில் குடிநீா் கொண்டு செல்லும் குழாய் அமைக்கும் திட்டம் நிறைவடைந்த நிலையில், புதன்கிழமை தண்ணீா் விநியோகம் தொடங்கிவைக்கப்படவுள்ளது. கடந்த 2010-11-ஆம் கல்வியாண்டில் காரைக்காலில் என்ஐ... மேலும் பார்க்க