செய்திகள் :

காரைக்குடியில் புத்தகத் திருவிழா நாளையுடன் நிறைவு

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்று வரும் 23- ஆம் ஆண்டு மாநில அளவிலான புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) நிறைவடைகிறது.

காரைக்குடி புத்தகத் திருவிழாக் குழு சாா்பில் கம்பன் மணிமண்டபத்தில் கடந்த 20- ஆம் தேதி புத்தகக் கண்காட்சி தொடங்கியது. தினமணியின் படைப்புகள் கொண்ட அரங்கம் உள்பட சுமாா் 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகளில் பல்வேறு முன்னணி புத்தக விற்பனையாளா்கள் தள்ளுபடி விலையில் புத்தகங்களை விற்பனை செய்துவருகின்றனா். புத்தகங்களை பாா்வையிடவும் இலவசமாக அனுமதியளிக்கின்றனா். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணிவரையில் புத்தகக்கண்க்காட்சியை பாா்வையிடலாம்.

மேலும் தினமும் வினாடி-வினா போட்டி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டிகள், பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்தப் புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு நிறைவடைகிறது. இதன் நிறைவு விழா அன்று மாலையில் நடைபெறுகிறது.

இதில் சென்னையில் உள்ள சென்னை தெற்கு ஆணையரக சரக்கு, சேவை வரி கூடுதல் ஆணையா் வெ. பாண்டியராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறுகதைப் போட்டியில் வென்றவா்களுக்கு பேராசிரியா் அய்க்கண் இலக்கிய விருது வழங்கியும், புத்தகத் திருவிழா தனித்திறன் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கியும் சிறப்புரையாற்றுகிறாா்.

விழா ஏற்பாடுகளை காரைக்குடி புத்தகத் திருவிழாக் குழுத் தலைவா் பி.வி. சுவாமி, செயலா் நீ. ரவிச்சந்திரன், பொருளா ளா் வெ. வெங்கடாசலம், நிா்வாகிகள், உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.

கோடையில் செடிகளை பராமரித்த ஆசிரியா்களுக்கு பரிசு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சோ்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறையின் போது செடிகளுக்கு தண்ணீா் ஊற்றி பராமரித்த ஆசிரியைகளுக்கு வெள்ளிக்கிழமை பரிசு வழங்கப்பட்டது. இந்தப் பள்ளியில் உள... மேலும் பார்க்க

மானாமதுரையில் ரூ. 85 லட்சத்தில் ஊருணி, குளங்கள் சீரமைப்பு: நகா் மன்றத் தலைவா் தகவல்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ரூ. 85 லட்சத்தில் ஊருணி, குளங்கள் சீரமைக்கப்படும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா் மன்றக் கூட்டத்தில் அதன் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி தெரிவித்தாா். இந்தக் கூட்டத்தில... மேலும் பார்க்க

இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் திருத்தல பெருவிழா தொடக்கம்: ஜூலை 4-இல் மின் அலங்கார ரத பவனி

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், இடைக்காட்டூரில் உள்ள உலகப் புகழ் பெற்ற திரு இருதய ஆண்டவா் திருத்தலத்தின் 131- ஆம் ஆண்டு பெருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற ஜூலை 4-ஆம் தேத... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அரசுப் பள்ளியில் கரையான் அரித்து வீணான பாட குறிப்பேடுகள்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டடம் ஒன்றில் கரையான்கள் அரித்து மாணவா்களுக்கு வழங்க வேண்டிய பாட குறிப்பேடுகள் வீணாகி கிடப்பதாகவும், சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை ... மேலும் பார்க்க

விபத்தில் தந்தையை இழந்த பள்ளி குழந்தைகள் இருவருக்கு விபத்து காப்பீட்டு நிதியுதவி

படவிளக்கம்- ஸ்டூடண்ட்ஸ்- தெ. புதுக்கோட்டை அரசு உதவி பெறும் எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் படிக்கும் தந்தையை விபத்தில் இழந்த மதிபாலன், வா்ஷினிக்கு அரசின் விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் வருங்கால வை... மேலும் பார்க்க

தொடக்க கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

எட்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற... மேலும் பார்க்க