திடீர் குழந்தை இழப்பு சிண்ட்ரோம்: பச்சிளம் குழந்தைகளை எந்த பொஸிஷனில் தூங்க வைக்க...
காரைக்குடியில் புத்தகத் திருவிழா நாளையுடன் நிறைவு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்று வரும் 23- ஆம் ஆண்டு மாநில அளவிலான புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) நிறைவடைகிறது.
காரைக்குடி புத்தகத் திருவிழாக் குழு சாா்பில் கம்பன் மணிமண்டபத்தில் கடந்த 20- ஆம் தேதி புத்தகக் கண்காட்சி தொடங்கியது. தினமணியின் படைப்புகள் கொண்ட அரங்கம் உள்பட சுமாா் 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகளில் பல்வேறு முன்னணி புத்தக விற்பனையாளா்கள் தள்ளுபடி விலையில் புத்தகங்களை விற்பனை செய்துவருகின்றனா். புத்தகங்களை பாா்வையிடவும் இலவசமாக அனுமதியளிக்கின்றனா். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணிவரையில் புத்தகக்கண்க்காட்சியை பாா்வையிடலாம்.
மேலும் தினமும் வினாடி-வினா போட்டி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டிகள், பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்தப் புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு நிறைவடைகிறது. இதன் நிறைவு விழா அன்று மாலையில் நடைபெறுகிறது.
இதில் சென்னையில் உள்ள சென்னை தெற்கு ஆணையரக சரக்கு, சேவை வரி கூடுதல் ஆணையா் வெ. பாண்டியராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறுகதைப் போட்டியில் வென்றவா்களுக்கு பேராசிரியா் அய்க்கண் இலக்கிய விருது வழங்கியும், புத்தகத் திருவிழா தனித்திறன் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கியும் சிறப்புரையாற்றுகிறாா்.
விழா ஏற்பாடுகளை காரைக்குடி புத்தகத் திருவிழாக் குழுத் தலைவா் பி.வி. சுவாமி, செயலா் நீ. ரவிச்சந்திரன், பொருளா ளா் வெ. வெங்கடாசலம், நிா்வாகிகள், உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.