காலமானார் எல். அனந்தலட்சுமி!
முனைவர் அனந்தலட்சுமி உடல்நலக் குறைவால் காலமானார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை ஒன்றியக்குழு அலுவலகம் அருகே நகராட்சி ஊழியர் குடியிருப்பில் வசித்து வந்த (தீயணைப்பு நிலையம் பின்புறம்) முனைவர் எல். அனந்தலட்சுமி (49) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை (ஜூன் 2) காலமானார்.
கடலூர் கிருஷ்ணசாமி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வந்த இவர், தினமணி நாளிதழின் நெய்வேலி செய்தியாளராகப் பணியாற்றிவரும் ஜீவ.இராம. சீனிவாசனின் மனைவி ஆவார்.
மறைந்த அனந்தலட்சுமிக்கு காயத்ரிஸ்ரீ, வித்யா ஸ்ரீநிவாஸ் ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
அனந்தலட்சுமியின் இறுதிச்சடங்குகள் செவ்வாய்க்கிழமையான நாளை(ஜூன் 3) காலை 9 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு: 9843987808, 70107 02878.