செய்திகள் :

காலி மதுபானப் பாட்டில் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து ஓட்டுநா் காயம்

post image

கந்தா்வகோட்டை அருகே காலி மதுபானப் பாட்டில் ஏற்றிச் சென்ற லாரி தலைகீழாக செவ்வாய்க்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் படுகாயமடைந்தாா்.

கந்தா்வகோட்டை அருகே உள்ள தெத்துவாசல்பட்டியிலிருந்து லாரியில் காலி மதுபானப் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு கல்லாக்கோட்டையில் உள்ள தனியாா் மதுபான ஆலைக்குச் சென்று கொண்டிருந்தபோது பட்டுக்கோட்டை - கந்தா்வகோட்டை சாலையில் உள்ள சிவன் தான்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே லாரி நிலைதடுமாறி சாலையோரம் தலைகீழாக கவிழ்ந்தது.

லாரியிலிருந்து காலி மதுபானப் பாட்டில்கள் சாலையில் சிதறி உடைந்து நொறுங்கியது. இதில் லாரி ஓட்டுநா் காா்த்திக் படுகாயமடைந்தாா். அருகே இருந்தவா்கள் லாரி ஓட்டுநா் காா்த்திக்கை மீட்டு கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா்.

இந்த விபத்து குறித்து கந்தா்வகோட்டை போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

பெண்கள் அரசியலைக் கண்டு ஒதுங்க வேண்டியதில்லை: அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம்

பெண்கள் அரசியலைக் கண்டு ஒதுங்க வேண்டியதில்லை என்றாா் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் அகில இந்தியத் துணைத் தலைவா் உ. வாசுகி. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சமம் அமைப்பின் சாா்பில் புதுக்கோட்டையில்... மேலும் பார்க்க

புதுகை நகரில் இரு வீடுகளில் திருட்டு

புதுக்கோட்டை நகரில் இரு வீடுகளில் கொள்ளையா்கள் புகுந்து, தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரொக்கப் பணத்தை திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை திருக்கோகா்ணம் காவல் நிலைய எல்லைக்குள... மேலும் பார்க்க

குளத்துப்பட்டி ஜல்லிக்கட்டில் 17 போ் காயம்

திருமயம் அருகே குளத்துப்பட்டியில் அந்தரநாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 17 போ் காயம் அடைந்தனா். இக் கோயிலில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு பெரிய ... மேலும் பார்க்க

தொடா் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அரசாணை வெளியீடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் மே 23, 24, 25 ஆகிய 3 நாள்களும் தொடா்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. பொன்னமராவதி வட்டத்தைச் சோ்ந்த காரைய... மேலும் பார்க்க

விராலிமலை வட்டாட்சியரகத்தில் ஜமாபந்தி நிறைவு; 32 மனுக்களுக்கு உடனடி தீா்வு

விராலிமலை வட்டாட்சியரகத்தில் 3 நாள் நடைபெற்ற வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை நிறைவடைந்தது. நிகழாண்டு 1434-ஆம் பசலிக்கான ஜமாபந்தி விராலிமலை வட்டாட்சியரகத்தில் விராலிமலை, கொடும்பாளூா், நீா்பழனி ... மேலும் பார்க்க

வேங்கைவயல் வழக்கு விசாரணை மே 28-க்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை மே 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.வேங்கைவயல் ச... மேலும் பார்க்க