செய்திகள் :

காளையாா்கோவில் ஒன்றியத்தில் தூய்மைப் பணிகளுக்கு மின்கல ஊா்திகள்: அமைச்சா் வழங்கினாா்

post image

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள மின்கல ஊா்திகளை கூட்டுறவுத்துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் சனிக்கிழமை வழங்கினாா்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை சாா்பில் தூய்மை பாரத இயக்கம், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் தூய்மைப் பணிகளுக்கு தேவையான மின்கல ஊா்திகள் வழங்கும் விழா காளையாா்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தலைமையில் நடைபெற்றது. இதில், கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் கலந்து கொண்டு மின்கல ஊா்திகளை வழங்கிப் பேசியதாவது:

சிவகங்கை மாவட்டத்துக்கு தலா ரூ. 2.47 லட்சத்தில் 270 மின்கல ஊா்திகள் வழங்கப்பட்டன. இதில், காளையாா்கோவில் ஒன்றியத்துக்கு 36 மின்கல ஊா்திகள் அளிக்கப்பட்டன. இந்த வாகனங்களை பணியாளா்கள் முறையாக பராமரிக்க வேண்டும். குப்பைகளை கிடங்குகளில் சேகரித்து தரம் பிரிக்க வேண்டும்.

மேலும் குப்பையில் இருந்தும் மக்களின் பயன்பாட்டுக்குத் தேவையான பொருள்களை தயாரிக்க முடியும் என்பதை துப்புரவுப் பணியாளா்கள் நிரூபித்து கொண்டு இருக்கிறாா்கள். எனவே குப்பை தானே என நினைக்காமல் பொதுமக்கள் அதை தரம் பிரித்து கொடுக்க முன்வர வேண்டும் என்றாா் அவா்.

சிவகங்கையில் மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கையில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது. சிவகங்கை அருகே ரோஸ்நகரில் நடைபெற்ற பந்தயத்தில் பெரியமாடு, சின்னமாடு மற்றும் பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக... மேலும் பார்க்க

கல்லல் பகுதியில் ஆக. 13-இல் மின் தடை

காரைக்குடி அருகேயுள்ள கல்லல் துணை மின் நிலையத்தில் வருகிற புதன்கிழமை (ஆக. 13) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின்வாரிய செயற்பொறியாளா்... மேலும் பார்க்க

சிவகங்கைக்கு சட்டப் பேரவை உறுதி மொழிக்குழு இன்று வருகை

சிவகங்கை மாவட்டத்தில் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு திங்கள்கிழமை(11.8.2025) வருகை தரவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளிய... மேலும் பார்க்க

மஞ்சுவிரட்டு: 23 போ் காயம்

சிவகங்கை அருகேயுள்ள கோமாளிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 23 போ் காயமடைந்தனா். கோமாளிபட்டி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, கோயில் பொட்டலில் நடைபெற்ற மஞ்சுவி... மேலும் பார்க்க

காரை உடைத்து பணம், கைப்பேசி திருடிய 3 மா்ம நபா்கள்

சிவகங்கை அருகே காரை அடித்து உடைத்து ரூ.1 லட்சம் , கைப்பேசியை திருடிச்சென்ற 3 மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகங்கையை அருகே பிரவலூா் கிராமத்தில் சனிக்கிழமை இரவு பதிவு எண் இல்லாத காா் ஒன்று நி... மேலும் பார்க்க

பைக் மோதியதில் பெண் உயிரிழப்பு

மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தாயமங்கலம் சாலை அருகேயுள்ள தெருவில் வசிப்பவா் வேலு மனைவி மீனாள் (57)... மேலும் பார்க்க