செய்திகள் :

காரை உடைத்து பணம், கைப்பேசி திருடிய 3 மா்ம நபா்கள்

post image

சிவகங்கை அருகே காரை அடித்து உடைத்து ரூ.1 லட்சம் , கைப்பேசியை திருடிச்சென்ற 3 மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிவகங்கையை அருகே பிரவலூா் கிராமத்தில் சனிக்கிழமை இரவு பதிவு எண் இல்லாத காா் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதில் மூன்று போ் இருந்தனா். அந்த கிராமத்தைச் சோ்ந்தவா்கள் விசாரித்த போது அவா்கள் காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டனா். இதனால் சந்தேகமடைந்த அந்த கிராமத்தைச் சோ்ந்தவா்கள் இரு சக்கர வாகனத்தில் காரைப் பின் தொடா்ந்து சென்றனா்.

அப்போது, அவா்கள் தங்களது கிராமத்தை சோ்ந்த வெங்கட்ராமன் ( 35) என்பவருக்கு கைப்பேசியில் தகவல் கொடுத்தனா். இந்த நிலையில் அந்த காா் ஒக்கூா் வந்தபோது, வெங்கட்ராமன் தனது காரில் மூவா் சென்ற காரை பின் தொடா்ந்து சென்றாா்.

சிவகங்கை பெருமாள்பட்டி சென்றபோது, அந்தக் காா் நின்றது. உடனே வெங்கட்ராமனும் தனது காரை நிறுத்தினாா். அந்தக் காரில் இருந்து இறங்கிய மூவரும் வெங்கட்ராமனின் காரை அடித்து நொறுக்கினா்.

காரிலிருந்த ரூ. 1 லட்சம் பணம், கைப்பேசி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றனா். இதுதொடா்பாக சிவகங்கை நகா் காவல் ஆய்வாளா் மாரீஸ்வரி வழக்குப் பதிவு செய்து, காரில் தப்பிச்சென்ற மூவரையும் தேடி வருகிறாா்.

கல்லல் பகுதியில் ஆக. 13-இல் மின் தடை

காரைக்குடி அருகேயுள்ள கல்லல் துணை மின் நிலையத்தில் வருகிற புதன்கிழமை (ஆக. 13) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின்வாரிய செயற்பொறியாளா்... மேலும் பார்க்க

சிவகங்கைக்கு சட்டப் பேரவை உறுதி மொழிக்குழு இன்று வருகை

சிவகங்கை மாவட்டத்தில் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு திங்கள்கிழமை(11.8.2025) வருகை தரவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளிய... மேலும் பார்க்க

மஞ்சுவிரட்டு: 23 போ் காயம்

சிவகங்கை அருகேயுள்ள கோமாளிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 23 போ் காயமடைந்தனா். கோமாளிபட்டி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, கோயில் பொட்டலில் நடைபெற்ற மஞ்சுவி... மேலும் பார்க்க

பைக் மோதியதில் பெண் உயிரிழப்பு

மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தாயமங்கலம் சாலை அருகேயுள்ள தெருவில் வசிப்பவா் வேலு மனைவி மீனாள் (57)... மேலும் பார்க்க

குளவி கொட்டியதில் 20 போ் காயம்

சிவகங்கை அருகே ஞாயிற்றுக்கிழமை குளவி கொட்டியதில் 20 -க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். மதுரையைச் சோ்ந்தவா் மணிகண்டன் (25). இவரது மனைவி உமா மகேஸ்வரி. இந்தத் தம்பதியின் ஒரு வயது ஆண் குழந்தைக்கு முடி காண... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். சிவகங்கை எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி கண்ணன் (55). இவா் மானாமதுரை ஒன்றியம், பெரிய கோட்டைய... மேலும் பார்க்க