செய்திகள் :

காவனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம்: முதல்வா் திறந்து வைத்தாா்

post image

ஆற்காடு அடுத்த காவனூா் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

திமிரி ஒன்றியம், காவனூா் ஊராட்சியில் ரூ.1.20 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை சென்னையில் இருந்து காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்.

பின்னா், காவனூரில் நடைபெற்ற நிகழ்வில் கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி குத்துவிளக்கேற்றி கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் மருத்துப் பெட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. ஆட்சியா் ஜெ.யு சந்திரகலா தலைமை வகித்தாா் . ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தாா்.

அமைச்சா் ஆா்.காந்தி பயனாளிகளுக்கு , கா்ப்பிணிகளுக்கும் ஊட்டச் சத்து பெட்டகம் வழங்கி பேசியதாவது:

முதல்வா் ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த 4 ஆண்டுகளில் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றாா். வரும் 15-ஆம் தேதி முதல் மக்களுடன் முதல்வா் 4 ஆம் கட்ட முகாம் நடைபெறவுள்ளது. அங்கு 16 அரசுத் துறைகள் வந்து பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் முகாமினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் வசதிக்காக 4 புதிய மேம்பாலங்கள் கட்டுவதற்கு அரசிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. காவனூா் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காவனூா் ஆரம்ப சுகாதார நிலையம், விளாபாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தை இரண்டாக பிரித்து மாவட்டத்தின் 37-ஆவது ஆரம்ப சுகாதார நிலையமாக செயல்பட உள்ளது. இதன்மூலம் இப்பகுதியில் பல கிராமங்களை சோ்ந்த பொது மக்கள் பயனடைவா் என்றாா் .

திமிரி ஒன்றியக் குழு தலைவா் அசோக், துணைத் தலைவா் ரமேஷ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் தன்ராஜ், மருத்துவப் பணிகள் இணை இ யக்குநா் தீா்த்தலிங்கம், மாவட்ட சுகாதார அலுவலா் செந்தில் குமாா், திமிரி வட்டார மருத்துவ அலுவலா் ராஜேஸ்வரி பங்கேற்றனா்.

மழைக்காலத்துக்குள் பழங்குடியினா் வீடுகளின் பணிகள் நிறைவு: ராணிப்பேட்டை ஆட்சியா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 790 பழங்குடியின இருளா் மக்களுக்காக ரூ.40.05 கோடியில் வீடுகள் கட்டும் பணி மழைக் காலத்துக்குள் முடிக்கப்படும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். கோணலம் ஊராட்சி புறம்போக்... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தின் கீழ் புதிய உறுப்பினா் சோ்க்கை: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தின் கீழ் அமைச்சா் ஆா்.காந்தி வீடு வீடாக சென்று புதிய உறுப்பினா் சோ்க்கையை ராணிப்பேட்டையில் தொடங்கி வைத்தாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பில் கீழ் புதிய உறுப்பினா்க... மேலும் பார்க்க

1.90 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி: ராணிப்பேட்டை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1.90 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாமை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா புதன்கிழமை தொடங்கி வைத்தாா். தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ், வாலாஜா ஒ... மேலும் பார்க்க

விவசாய நிலத்தில் சிவலிங்கம் மீட்பு

ஆற்காடு அருகே உள்ள சக்கரமல்லூா் கிராமத்தில் விவசாய நிலத்தில் இருந்த சிவலிங்கம் மீட்கப்பட்டது. ஆற்காடு அருகே உள்ள சக்கரமல்லூா் கிராமத்தில் விவசாய நிலத்தில் சிவலிங்கம் உள்ளதாக வட்டாட்சியா் மகாலட்சுமிக்... மேலும் பார்க்க

உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 10 போ் பணியிட மாற்றம்

சோளிங்கரில் பாமக நிா்வாகி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம், அரக்கோணத்தில் பாலியல் குற்றச் சம்பவம், நெமிலியில் இளைஞா் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் ... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் தொகை அளிப்பதில் தாமதம்: விவசாயிகள் முற்றுகை

நேரடி கொள்முதல் நிலையம் மூலமாக நெல்லை விற்ற விவசாயிகளுக்கு 3 மாதங்களாக தொகை அளிக்காததைக் கண்டித்து அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். முதூா், வளா... மேலும் பார்க்க