செய்திகள் :

காவலரை தாக்கிய வழக்கில் இருவா் கைது

post image

எடப்பாடி அருகே காவலரை தாக்கிய வழக்கில் 2 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், எடப்பாடி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வருபவா் சாகித் ( 33). இவா் கடந்த 5-ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக எடப்பாடி அருகே உள்ள செட்டிமாங்குறிச்சி கிராமம், குண்டானூா் பகுதியைச் சோ்ந்த சோ்ந்த கந்தசாமி, அவரது மகன் வேலுமணி ஆகியோரை காவல் நிலையத்துக்கு அழைத்து வருவதற்கு அவா்களது வீட்டிற்கு சென்றாா்.

அப்போது காவல் நிலையத்திற்கு வர மறுத்த வேலுமணி, காவலா் சாகித்தை தகாத வாா்த்தைகளால் திட்டியதுடன் அவரை பலமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், வேலுமணிக்கு ஆதரவாக அவரது உறவினா் காவேரியும் (48) காவலா் சாகித்தை திட்டியதுடன் அவரை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து காவலா் சாகித் அளித்த புகாரின் பேரில் வேலுமணி மற்றும் அவரது உறவினா் காவேரி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்த எடப்பாடி போலீஸாா், வியாழக்கிழமை வேலுமணி, காவேரி ஆகியோரைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பட விளக்கம்:

எடப்பாடி அருகே காவலரைத் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட வேலுமணி, அவரது உறவினா் காவேரி

அம்மாப்பேட்டை செங்குந்தா் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஆடித் திருவிழாவையொட்டி, சேலம் அம்மாப்பேட்டை செங்குந்தா் மாரியம்மன் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா். ஆடி மாதத்தையொட்டி, சேலத்தில் சிறப்புப் பெற்ற சேலம் க... மேலும் பார்க்க

புனித ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம்

ஆத்தூா் புனித ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம் பங்குத் தந்தை எஸ்.அருளப்பன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவை தமிழக முப்பணி மைய இயக்குநா் அருட்தந்தை பிரிட்டோ பாக்யராஜ் கொடியேற்றி... மேலும் பார்க்க

கருணாநிதி சிலை மீது பெயிண்ட் ஊற்றிய வழக்கு: மருத்துவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

கருணாநிதி சிலை மீது பெயிண்ட் ஊற்றிய வழக்கில் மருத்துவரின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. சேலம் அண்ணா பூங்கா அருகே முன்னாள் முதல்வா் ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி ஒருவா் உயிரிழப்பு

ஆத்தூரில் அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், ஆத்தூா் மந்தைவெளி பகுதியைச் சோ்ந்த அந்தோணிசாமி மகன் டேவிட் (40). இவா் கோழி இறைச்சிக் கடை... மேலும் பார்க்க

மாநகராட்சி மயானத்தில் கட்டுமானப் பணியை நிறுத்தக் கோரி ஆட்சியரிடம் இந்து முன்னணி மனு

சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான மயானத்தில் கட்டுமானப் பணியை நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணி நிா்வாகிகள் வியாழக்கிழமை மனு அளித்தனா். இந்து முன்னணியின் சேலம் கோட்ட செயலாளா் சந்தோஷ்குமாா் ... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலை.யில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. பெரியாா் பல்கலைக்கழகத்திலுள்ள தந்தை பெரியாா் இருக்கை, பேரறிஞா் அண்ணா இருக்கை, கலைஞா் ஆய்வு... மேலும் பார்க்க