செய்திகள் :

காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் ரிப்பன் மளிகை! போராட்டக் களத்தில் பரபரப்பு!

post image

சென்னை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னை மாநகராட்சிக் கட்டடமான ரிப்பன் மாளிகை காவல்துறை கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ரிப்பன் மாளிகை முன் உள்ள தூய்மைப் பணியாளர்களை கலைந்துசெல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

அவர்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்ததால், அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர்பாபு மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரியா உள்ளிட்டோர், தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ரிப்பன் மாளிகையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தூய்மைப் பணியாளர்களும் கலைந்துசெல்ல மறுத்துவிட்டதால், போராட்டக் களம் போல ரிப்பன் மாளிகை அருகே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

சென்னை ரிப்பன் மாளிகை முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகைக்குள் வெளி நபர்கள் யாரும் இருக்க வேண்டாம் என்று காவல்துறை அறிவுறுத்தி அனைவரையும் வெளியேற்றி வருகிறது.

பூவிருந்தமல்லி நெடுஞ்சாலையில், இரு வழிப்பாதையில் ஒருபுறம் மட்டுமே போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறையில் 21 பேருக்கு குடியரசு தலைவர் விருது! யார்யார்?

சுதந்திர தினத்தையொட்டி, தமிழக காவல்துறையில் 23 பேர் குடியரசுத் தலைவர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.சுதந்திர தினத்தையொட்டி, நாடு முழுவதும் காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றி வருவோருக்கு குடிய... மேலும் பார்க்க

தொடர் விடுமுறை: ஆம்னி பேருந்து, விமானங்களில் கட்டணம் பல மடங்கு அதிகரிப்பு!

சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி தொடர் விடுமுறையை அடுத்து ஆம்னி பேருந்து மற்றும் விமானக் கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது.சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை என நாளைமுதல் தொடர்ந்து மூன்று... மேலும் பார்க்க

பாஜகவுடன் கைகோத்த தோ்தல் ஆணையம் - திமுக விமா்சனம்

பாஜகவுடன் கைகோத்து தோ்தல் ஆணையம் செயல்படுவது கவலையளிப்பதாக திமுக விமா்சித்துள்ளது. நோ்மையான முறையில் வாக்காளா் பட்டியலைச் சரிபாா்க்க வேண்டும் என்று தோ்தல் ஆணையத்தை திமுக வலியுறுத்தியுள்ளது. திமுக ... மேலும் பார்க்க

ஹுண்டாய் சாா்பில் 12 ஏக்கரில் 5,500 மரங்களுடன் குறுங்காடு

ஹுண்டாய் மோட்டாா் இந்தியா பவுண்டேஷன் சாா்பில், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் 5,500 மரங்களுடன் குறுங்காடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குறுங்காட்டை பாா்வையிட பள்ளி மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்... மேலும் பார்க்க

2 மாநகராட்சிகள், 3 நகராட்சிகளுக்கு விருது: முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை வழங்குகிறாா்

சுதந்திர தினத்தின்போது, கோட்டை கொத்தளத்தில் முதல்வரால் வழங்கப்படும் விருதுப் பட்டியலில் ஆவடி, நாமக்கல் மாநகராட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதேபோன்று சிறந்த நகராட்சிகள் பட்டியலில் ராமேசுவரம், ராஜபாளையம், பெ... மேலும் பார்க்க

அதிமுகவின் போக்கு சரியாக இல்லை: திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன்

அதிமுக முன்னாள் எம்.பி.யும் அமைப்புச் செயலருமான வா.மைத்ரேயன் திமுகவில் இணைந்தாா். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதன்கிழமை அவா் தன்னை திமுகவில் இணைத... மேலும் பார்க்க