Anxiety: மனப்பதற்றம் தானாக சரியாகுமா... சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமா?!
காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்
திருநெல்வேலியில் காவல் துறையின் சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் உத்தரவுப்படி, காவல்துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம் ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெற்று வருகிறது.
அதன்படி, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி தலைமை வகித்து மனுக்களைப் பெற்றாா். இம்முகாமில் 5 போ் மனு அளித்தனா். அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.
மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் 25 மனுக்களைப் பெற்று, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.