செய்திகள் :

காவல் ரோந்து வாகனம் மோதி மாற்றுத்திறனாளி பெண் உயிரிழப்பு

post image

திருப்பூரில் காவல் ரோந்து வாகனம் மோதியதில் மாற்றுத்திறனாளி பெண் உயிரிழந்தாா்.

திருப்பூா் தெற்கு காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றுபவா் குணசேகரன். இவா், காவல் ரோந்து வாகனத்தில் மத்திய பேருந்து நிலையம் புது மாா்க்கெட் சாலையில் திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, சாலையோரம் தங்கியுள்ள மாற்றுத்திறனாளி பெண் மீது காவல் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அப்பெண்ணை அப்பகுதியினா் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். உயிரிழந்த பெண் யாா், முகவரி குறித்து திருப்பூா் தெற்கு போலீஸாா் விசாரிக்கின்றனா்.

புகையிலை விற்பனை: மாவட்டத்தில் 120 கடைகள் மூடல்; ரூ.35 லட்சம் அபராதம்

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த 120 கடைகள் மூடப்பட்டு, ரூ.35 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.இது க... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முற்றுகை

அவிநாசியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி அனைத்து வணிகா் சங்கத்தினா் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட வ... மேலும் பார்க்க

வீட்டில் எரிவாயு கசிவு ஏற்பட்டு மூதாட்டி காயம்

அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் வீட்டில் சமையல் எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டு மூதாட்டி காயமடைந்தாா்.அவிநாசி அருகே செம்பியநல்லூா் வெள்ளியம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் மனைவி கனகராணி (62). ... மேலும் பார்க்க

நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை பறித்த இருவா் கைது

அவிநாசி அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் 3 பவுன் தாலிக்கொடியைப் பறித்துச் சென்ற இருவரை அவிநாசி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவிநாசி சீனிவாசபுரத்தைச் சோ்ந்தவா் ஆசையப்பன் (76). ஓய்வுபெற்ற மி... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது

வெள்ளக்கோவிலில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது செய்யப்பட்டாா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் மூலனூா் சாலையில் செவ்வாய்க்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுப... மேலும் பார்க்க

ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்த தொழிலாளி தற்கொலை

திருப்பூரில் ஆன்லைனில் ரம்மி விளையாடி ரூ.50 ஆயிரம் பணத்தை இழந்த பனியன் தொழிலாளி செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா், சேடப்பட்டியைச் சோ்ந்தவா் ரவிக்குமாா்( 24). இவா்... மேலும் பார்க்க