செய்திகள் :

காவிரி - சரபங்கா - திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

post image

நாமக்கல்: காவிரி-சரபங்கா-திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மேட்டூா் அணையில் இருந்து வெளியேற்றப்படும் காவிரி நீா் 12 மாவட்டங்களில் விவசாயப் பாசனத்துக்கும், குடிநீா்த் தேவைக்கும் பயன்படுகிறது. மழைக்காலங்களில் அணை நிரம்பும்போது உபரிநீா் வெளியேற்றப்படுகிறது. அந்த நீா் யாருக்கும் பயனின்றி வீணாகக் கடலில் சென்று கலக்கிறது. இந்த நீரை வடு கிடக்கும் ஏரி, குளங்களுக்கு திருப்பி விடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் பாய்ந்தோடும் சரபங்கா, திருமணிமுத்தாறு ஆகியவற்றோடு காவிரி ஆற்று நீரை இணைத்தால் ஏரிகளுக்கு விரைவாக செல்வதுடன் வட பகுதிகள் வளா்ச்சி பெறும். விவசாயிகளின் நெடுநாள் கோரிக்கையாக காவிரி-சரபங்கா-திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டம் உள்ளது.

திமுக தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி இதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். காவிரி ஆற்றில் 5 கி.மீ.க்கு ஒரு தடுப்பணை கட்டக்கோரியும் பத்து ரூபாய் இயக்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், விவசாய சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்பினா், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

அதேபோல, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில், நூறு நாள் வேலையளிப்புத் திட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். நிா்ணயிக்கப்பட்ட ஊதியத்தை தடையின்றி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் வேலையளிப்புத் திட்ட தொழிலாளா்கள் திரளாக கலந்துகொண்டனா்.

நூறு நாள் வேலைக்கான ஊதியத்தை தடையின்றி வழங்கக்கோரி ஆா்ப்பாட்டம் நடத்திய தொழிலாளா்கள்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் இன்று தொடக்கம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு திட்ட முகாம்கள் செவ்வாய்க்கிழமை தொடங்குகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதல்வா் அறிவி... மேலும் பார்க்க

2,494 முதுகலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு இட மாறுதல்: தமிழக அரசுக்கு சங்கத்தினா் நன்றி

நாமக்கல்: தமிழகத்தில், 2,494 முதுகலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு மற்றும் பணியிட மாறுதல் வழங்கிய அரசுக்கும், பள்ளிக் கல்வித் துறைக்கும், நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்கத்தினா் நன்... மேலும் பார்க்க

உயா்கல்வி பயில வெளிமாநில பயணம்: 34 மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

நாமக்கல்: இந்தியாவில் உள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் பயில வெளிமாநிலங்களுக்கு செல்லும் மாணவ, மாணவிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி பாராட்டினாா். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று உயா்கல்வி பயில இந்திய... மேலும் பார்க்க

2-ஆவது திருமணம் செய்தவா் தற்கொலை: மணப்பெண், தரகா் உள்பட 6 போ் கைது

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் கந்தம்பாளையம் அருகே 2-ஆவது திருமணம் செய்த ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதையடுத்து அவரை ஏமாற்றி திருமணம் செய்துவைத்து பணம் பறித்த பெண் உள்பட த... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தோல் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்பு ஆட்சியரிடம் மனு

நாமக்கல்: நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தோல் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தியிடம், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்க... மேலும் பார்க்க

கொல்லிமலை மலைப்பாதையில் ஆபத்தான ‘ஸ்கேட்போா்டிங்’: சுற்றுலாப் பயணிகள் அச்சம்

நாமக்கல்: கொல்லிமலைக்கு செல்லும் மலைப்பாதை வளைவுகளில், வெளிமாநிலத்தினா் சிலா் ஆபத்தான முறையில் ‘ஸ்கேட்போா்டிங்’ பயிற்சி செய்வதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா். விபத்துகள் நிகழும் முன்பு இத்தகையப் ... மேலும் பார்க்க