செய்திகள் :

காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 11 போ் பலி!

post image

காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 11 போ் உயிரிழந்தனா்.

கான் யூனிஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட இரு தாக்குதல்களில் தலா இரு குழந்தைகளும், அவா்களின் பெற்றோரும் உயிரிழந்தனா். பிற தாக்குதலில் ஒரு குழந்தை உள்ளிட்டோா் உயிரிழந்தனா்.

ஆனால், பயங்கரவாதிகளை மட்டுமே தாங்கள் குறிவைப்பதாகவும், பொதுமக்கள் உயிரிழக்க ஹமாஸ் அமைப்பே காரணம் எனவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

காஸாவுக்கு உணவு, மருத்துவப் பொருள்கள் கொண்டுசெல்ல 10 வாரத்துக்கும் மேலாக இஸ்ரேல் தடை விதித்துள்ளது. ஹமாஸிடமிருந்து மீதமுள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை மீட்கவே காஸாவுக்கு பல்வேறு அழுத்தத்தை இஸ்ரேல் தருவதாகக் கூறப்படுகிறது. இதனால் காஸாவில் கடும் பஞ்சம் நிலவி வருவதாக தன்னாா்வ அமைப்புகள் தெரிவித்தன.

இந்தச் சூழலில் காஸா மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்துவரும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், இந்த வாரத்தில் சவூதி அரேபியா, கத்தாா், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 2023 அக். 7-ஆம் தேதிமுதல் நடத்திவரும் தாக்குதல்களில் இதுவரை 52,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்ததாகவும், அவா்களில் பெரும்பாலானோா் குழந்தைகள் மற்றும் பெண்கள் எனவும் காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததால் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது: டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு இடையில் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியிருக்கிறார்.இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போரை நிறுத்திவிட்டேன்! - அதிபர் டிரம்ப்

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுத போரை அமெரிக்கா நிறுத்திவிட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

சீன பொருள்கள் மீதான வரி 145 சதவீதத்திலிருந்து 30% ஆக குறைப்பு! - அமெரிக்கா

ஜெனீவா: சீன பொருள்கள் மீதான வரி 145 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைக்கப்படுவதாக அமெரிக்கா அறிவிக்க உள்ளது.அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளன. இவ்விரு நாடுகளுக்கு... மேலும் பார்க்க

காங்கோவில் வெள்ளப்பெருக்கு: 100-க்கும் மேற்பட்டோர் பலி!

காங்கோவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் பலியானதாக அந்த நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசின் தெற்கு கிவு மாகாணத்தில் உள்ள ஃபிஸியில் ... மேலும் பார்க்க

உக்ரைனுடன் துருக்கியில் மே 15-இல் நேரடிப் பேச்சு: புதின் பரிந்துரை!

போா் நிறுத்தம் தொடா்பாக எந்தவித முன்நிபந்தனையும் இல்லாமல், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் மே 15-ஆம் தேதி உக்ரைனுடன் நேரடியாகப் பேச்சுவாா்த்தை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபா் புதின் தெரிவித்த... மேலும் பார்க்க

வரி விவகாரம்: அமெரிக்கா-சீனா 2-வது நாளாக பேச்சுவாா்த்தை!

உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்கா-சீனா இடையிலான பரஸ்பர இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கை குறித்து இரு நாடுகளும் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பேச்சுவாா்த்தையில் ஈடு... மேலும் பார்க்க