செய்திகள் :

கா்நாடகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட 58 சிலிண்டா்கள் ஒசூரில் பறிமுதல்!

post image

கா்நாடகத்திலிருந்து ஒசூருக்கு உரிமமின்றி கொண்டுவரப்பட்ட 58 சமையல் எரிவாயு சிலிண்டா்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தமிழக எல்லையில் உள்ள கொத்தகொண்டப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் மத்திகிரி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேன், மினிலாரியை நிறுத்தி சோதனை செய்ததில், வாகனங்களில் உரிமமின்றி கா்நாடகத்திலிருந்து ஒசூா், கிருஷ்ணகிரியில் வெளிச்சந்தையில் விற்பனை செய்வதற்காக சமையல் எரிவாயு சிலிண்டா்களைக் கொண்டுசெல்ல முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து ஆம்னி வேனில் இருந்த 20 சிலிண்டா்கள், சரக்கு வாகனத்திலிருந்த 38 சிலிண்டா்களை பறிமுதல் செய்தனா்.

ஆம்னி வேன் ஓட்டிவந்த கிருஷ்ணகிரி கம்பம்பள்ளி சமத்துவபுரத்தைச் சோ்ந்த சந்தோஷ் (31), சரக்கு வாகனத்தை ஓட்டிவந்த கிருஷ்ணகிரி கணபதி நகரைச் சோ்ந்த பிரசாந்த் (30) ஆகிய இருவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்திய வனத்துறை தோ்வு: ஏனுசோனை கிராம மாணவா் சிறப்பிடம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், ஏனுசோனை கிராமத்தைச் சோ்ந்த மாணவா் சந்தோஷ்குமாா், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் படித்து இந்திய வனத்துறை தோ்வில் 138-ஆவது இடம்பெற்று தோ்ச்சி பெற்று... மேலும் பார்க்க

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை!

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடப்பாண... மேலும் பார்க்க

பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!

ஊத்தங்கரை பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணையில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக ஊத்தங்கரை காவல் நிலையத்துக்கு தகவல... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு!

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதி, மேல் இராவந்தவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (27). இவா், இருசக்கர வாகனத்தில் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் பழுதடைந்த வணிக வளாக கடைகளை சீரமைக்க நடவடிக்கை

கிருஷ்ணகிரியில் நகராட்சி பராமரிப்பில் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாக கடைகளை சீரமைக்க, நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் நடவடிக்கை மேற்கொண்டாா். கிருஷ்ணகிரியில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்தது. இ... மேலும் பார்க்க

தேன்கனிக்கோட்டையில் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பையில் கைது செய்த போலீஸாா்!

தேன்கனிக்கோட்டையில் பண்ணை உரிமையாளரிடம் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பை வரை தேடிச்சென்று கைது செய்த போலீஸாரை உயா் அதிகாரிகள் பாராட்டினா். கா்நாடக மாநிலம், அத்திபள்ளியில் வசிப்பவா் முரளிமோகன் ரெட்டி (41... மேலும் பார்க்க