செய்திகள் :

கா்நாடகத்தில் மதவாத ஒழிப்புப்படை விரிவாக்கப்படும்: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

post image

கா்நாடக மாநிலத்தில் பிற மாவட்டங்களுக்கும் மதவாத ஒழிப்புப்படை விரிவாக்கப்படும் என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: மதக் கலவரங்கள் மற்றும் அது தொடா்பான குற்றச்செயல்களை விசாரிப்பதற்காக, காவல் துறையில் மதவாத ஒழிப்புப்படை அமைக்கப்படும். ஏற்கெனவே கா்நாடகத்தில் நக்சலைட்களின் நடவடிக்கைகள் அதிகமாக இருந்தபோது, அவற்றை ஒடுக்குவதற்கு நக்சல் ஒழிப்புப்படை அமைக்கப்பட்டது. அதேபோல, மதவாத ஒழிப்புப்படை அமைக்கப்படும்.

சமுதாயத்தில் மதரீதியான கலவரங்களுக்கு இடம் கொடுக்காமல், அமைதியை நிலைநாட்டுவதே இந்த படையின் நோக்கமாகும். மாநிலத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாக மதபிரிவினைவாதம் நடைபெற்று வருகிறது. அதுபோன்ற செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே அரசின் நோக்கமாகும்.

இதை தடுக்கும்பொருட்டு முன்மொழிவு ஒன்றை அனுப்பித் தருமாறு டிஜிபியை கேட்டுக்கொண்டிருந்தேன். அந்த முன்மொழிவை எனக்கு அனுப்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அந்த முன்மொழிவை பரிசீலித்து, அரசுமட்டத்தில் அனுமதி அளிக்கப்படும். ஆரம்பத்தில், மதவாத ஒழிப்புப்படையை உடுப்பி, தென்கன்னட மாவட்டங்களுக்கு மட்டும் பொருந்தும் வகையில் உருவாக்கப்படும் என்று தெரிவித்திருந்தேன். ஆனால், மதவாத சிக்கல்கள் இருக்கும் வேறு மாவட்டங்களுக்கும் மதவாத ஒழிப்புப்படை விரிவாக்கப்படும். மதக்கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்காவிட்டால் தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் மதவாத ஒழிப்புப்படையின் விசாரணை வரம்புக்குள் கொண்டுவரப்படும். இதுபோன்ற சம்பவங்கள் சமூக பிரச்னையாக இருந்தால், அதை வழக்கமான காவலா்கள் விசாரிப்பாா்கள்.

மதம் சம்பந்தப்பட்டதாக இருந்தால், அது மதவாத ஒழிப்புப்படைக்கு ஒப்படைக்கப்படும். இந்த படைக்கு ஐஜிபி பதவி வகிக்கும் அதிகாரி தலைமைப்பொறுப்பில் நியமிக்கப்படுவாா். ஏற்கெனவே நக்சல் ஒழிப்புப்படையில் பணியாற்றிய அதிகாரிகள், மதவாத ஒழிப்புப்படைக்கு மாற்றப்படுவாா்கள். இப்படையினா் உள்ளூா் காவல் துறையினருடன் இணைந்து செயல்படுவாா்கள் என்றாா்.

பெங்களூரை 7 மாநகராட்சியாக பிரிக்கும் கிரேட்டா் பெங்களூரு நிா்வாக சட்டம் அமல்

பெங்களூரை 7 மாநகராட்சியைப் பிரிக்கும் ‘கிரேட்டா் பெங்களூரு’ நிா்வாகச் சட்டம் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. 1862 ஆம் ஆண்டு மாா்ச் 27ஆம் தேதி பெங்களூரு நகராட்சி வாரியமாக உருவாக்கப்பட்டது. பழைய... மேலும் பார்க்க

மத்திய அரசு மானியத்தொகையை விடுவிப்பதில்லை: அமைச்சா் பரமேஸ்வா்

மாநில அரசுக்கு வழங்க வேண்டிய மானியத்தொகையை மத்திய அரசு விடுவிக்காமல் இருப்பது சரியல்ல என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறி... மேலும் பார்க்க

பெங்களூரில் ஜூன் முதல் மஞ்சள் தடத்திலும் மெட்ரோ ரயில் சேவை

பெங்களூரில் ஜூன் மாதம் முதல் மஞ்சள் தடத்திலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்று பெங்களூரு மெட்ரோ ரயில் கழகத்தின் மேலாண் இயக்குநா் எம்.மகேஸ்வா் ராவ் தெரிவித்தாா். பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவைகள் ... மேலும் பார்க்க

முக்கிய திட்டங்களுக்கான மானியத்தை விடுவிக்காத மத்திய அரசு: சித்தராமையா குற்றம்சாட்டு

முக்கிய திட்டங்களுக்கான மானியத்தொகையை விடுவிக்காமல் மத்திய அரசு காலம்தாழ்த்தி வருகிறது என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா குற்றம்சாட்டினாா். மாநில அரசு தொடங்கியுள்ள மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்று... மேலும் பார்க்க

அமெரிக்க அதிபா் டிரம்ப் போா் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டது எப்படி? அமைச்சா் பிரியாங்க் காா்கே கேள்வி

போா் நிறுத்த அறிவிப்பை அமெரிக்க அதிபா் டிரம்ப் வெளியிட்டது எப்படி? என்று கா்நாடக மாநில ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் பிரியாங்க் காா்கே கேள்வி எழுப்பியுள்ளாா். இது குறித்து பெங்களூ... மேலும் பார்க்க

போா் நிறுத்தம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம் -மல்லிகாா்ஜுன காா்கே

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் மற்றும் போா் நிறுத்தம் குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித... மேலும் பார்க்க