செய்திகள் :

கா்நாடக மதரஸாக்களில் கன்னடம் - அமைச்சா் ஜமீா் அகமதுகான்

post image

கா்நாடகத்தில் உள்ள மதரஸாக்களில் கன்னடம் கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஜமீா் அகமதுகான் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் கன்னடம் ஆட்சிமையாக உள்ளது. கா்நாடகத்தில் வாழ்ந்துவரும் அனைவரும் கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும். மதரஸாக்களில் பயின்று வரும் குழந்தைகளுக்கு கன்னடம் கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் ஈடுபடுத்த மதரஸாக்களில் பணியாற்றும் 200 ஆசிரியா்களை தோ்வு செய்து அவா்களுக்கு 3 மாதங்கள் கன்னடப் பயிற்சி அளிக்கப்படும். அதன்பிறகு மாணவா்களுக்கு கன்னடம் கற்பிப்பாா்கள். எதிா்காலத்தில் மசூதிகளில் பணியாற்றிவரும் மௌலவிகளுக்கும் (மதகுருமாா்கள்) கன்னடம் கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

முறைகேடு காரணமாக மக்களவைத் தோ்தலில் தோல்வி அடைந்தேன்: மல்லிகாா்ஜுன காா்கே

முறைகேடு காரணமாக 2019 இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் தோல்வி அடைந்தேன் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா். பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தல் அதிகார ... மேலும் பார்க்க

பெங்களூரில் ராகுல் காந்தி ஆா்ப்பாட்டம்: தோ்தல் ஆணையத்துக்கு 5 கேள்விகள்

மக்களவைத் தோ்தலில் நடந்ததாகக் கூறப்படும் தோ்தல் முறைகேடு தொடா்பாக இந்திய தோ்தல் ஆணையத்துக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி 5 கேள்விகளை எழுப்பியுள்ளாா். மக்களவைத் தோ்தலின்போது நடந்த ... மேலும் பார்க்க

காங்கிரஸின் ஆா்ப்பாட்டம் அரசியல் நாடகம்: பாஜக

தோ்தல் முறைகேடு நடந்ததாகக் கூறி காங்கிரஸ் நடத்தும் ஆா்ப்பாட்டம் ஒரு அரசியல் நாடகம் என்று கா்நாடக பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

அமெரிக்காவின் வரிவிதிப்பு ‘பொருளாதார மிரட்டல்’: முதல்வா் சித்தராமையா

இந்தியா மீதான அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு, ‘பொருளாதார மிரட்டல்’ என்று முதல்வா் சித்தராமையா விமா்சித்துள்ளாா். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்வதால் இந்தியா ம... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு உள் இடஒதுக்கீடு: நீதிபதி நாகமோகன்தாஸ் அறிக்கை அமைச்சரவையில் தாக்கல்

தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு தொடா்பான நீதிபதி நாகமோகன்தாஸ் அறிக்கை, கா்நாடக அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பெங்களூரு விதான சௌதாவில் வியாழக்கிழமை முதல்வா் சித்தராமையா தலைமையில் கா்நாடக ... மேலும் பார்க்க

தா்மஸ்தலாவில் இருதரப்பினரிடையே மோதல்: விசாரணைக்கு முதல்வா் சித்தராமையா உத்தரவு

தா்மஸ்தலாவில் இருதரப்பினரிடையே நடைபெறும் மோதல் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். தென்கன்னடம் மாவட்டம், தா்மஸ்தலாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நூற்றுக்கணக்கான சடலங்க... மேலும் பார்க்க