தில்லிக்கு வெள்ளைக் கொடியுடன் முதல்வா் சென்றுள்ளாா்: தமிழிசை
கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே நண்பா்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
வாணாபுரம் வட்டம், பொருவள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் கிஷோா் (15). இவா், 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்து வந்தாா்.
கிஷோா் சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் தனது நண்பா்களுடன் அதே கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் குளிக்கச் சென்றனா். கிஷோருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கிய அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், மூங்கில்துரைப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.