கிராம கோயில்களில் கும்பாபிஷேகம்
அரியலூா் அண்ணா நகரிலுள்ள சிவசக்தி மாரியம்மன், அல்லி நகரம் கருப்புசாமி, செங்குந்தபுரம் மாரியம்மன் ஆகிய கோயில்களின் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த இரு நாள்களாக கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த யாகசாலை பந்தலில் 4 கால யாகபூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து, மேற்கண்ட கோயில்களின் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியா்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினா். தொடா்ந்து, கோபுர கலசம் மற்றும் மூலவருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து, இரவு சுவாமிகளின் வீதியுலா நடைபெற்றது.