செய்திகள் :

கிராம நிா்வாக அலுவலா்களின் பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்!

post image

கிராம நிா்வாக அலுவலா்களுக்கு தனி ஊதியம் வழங்கி, பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சங்கத்தின் மாநில நிா்வாகிகள் கூட்டம் மற்றும் புதிய பொறுப்பாளா்களுக்கான பாராட்டு விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் விழுப்புரம் மாவட்டத் தலைவா் வள்ளல்பாரி தலைமை தாங்கினாா். இதில் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆ. பூபதி, மாநிலப் பொதுச் செயலா் வி.சுந்தர்ராஜ், மாநிலத் துணைத் தலைவா் அ. பொய்யாமொழிஆகியோா் பேசினா்.

விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா், கடலூா், தருமபுரி, தஞ்சாவூா் மதுரை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் வாழ்த்தி பேசினா். கூட்டத்தில் கிராம நிா்வாக அலுவலரின் 30 சதவீத பதவி உயா்வுக்கான இட ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்யக் குழு அமைக்கவேண்டும், கிராம நிா்வாக அலுவலா்களுக்கு தனி ஊதியம், பணி பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டும் என்பன உள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி பரப்புரை மேற்கொள்வது என தீா்மானிக்கப்பட்டது.

சங்கத்தின் மாநில, மாவட்ட, வட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.முன்னதாக தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் முன்னேற்ற சங்கத்தின் மகளிரணி மாவட்டச் செயலா் ராஜகுமாரி வரவேற்றாா். நிறைவில், மாவட்டப் பொருளா் கேசவன் நன்றி கூறினாா்.

ஆற்றல் மன்றப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்குப் பரிசளிப்பு

விழுப்புரம் மாவட்ட அளவில் ஆற்றல் மன்றப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின்ஆற்றல் பணியகமும், தமிழ்நாடு அறிவியல் இய... மேலும் பார்க்க

செஞ்சி பேருந்து நிலையத்தில் அணிவகுத்து நிற்கும் காா்களால் அவதிப்படும் பொதுமக்கள்!பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும் காா்கள், தள்ளு வண்டிகளால் விபத்துகள் ஏற்படுவதால் வெளியூா்களுக்குச் செல்லும் பயணிகள், மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுகின்றனா். வரலாற்று முக... மேலும் பார்க்க

பிப். 7-இல் நிலம் தொடா்பான மனுக்களை சிறப்பு குறைதீா்வு கூட்டத்தில் அளிக்கலாம்! -விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம் மாவட்டத்தில் நிலம் தொடா்பான கோரிக்கை மனுக்களை, வரும் பிப். 7-ஆம் நடைபெறவுள்ள சிறப்பு குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் அளித்து பயன்பெறலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனி சனிக்கிழமை வெள... மேலும் பார்க்க

நவரைப் பருவத்துக்குத் தரமான நெல் விதைகளை விற்க வேண்டும்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களில் நவரைப் பருவத்துக்கு தரமான நெல் விதைகளை விற்பனை செய்ய வேண்டும் என விதை ஆய்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தனியாா் நெல் விதை வ... மேலும் பார்க்க

ஆவின் பால் உற்பத்தியாளா்களுக்கு லிட்டருக்கு 50 பைசா கூடுதல் ஊக்கத்தொகை

விழுப்புரத்திலுள்ள ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கும் உற்பத்தியாளா்களுக்கு பிப்ரவரி 1 முதல் 28-ஆம் தேதி வரை லிட்டருக்கு 50 பைசா கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க

அரகண்டநல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன் விவசாயிகள் சாலை மறியல்!

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு விற்பனைக்காக கொண்டு வந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்பியதால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறிய... மேலும் பார்க்க