செய்திகள் :

கிரிக்கெட் பந்தின் மீது உமிழ்நீரைப் பயன்படுத்த அனுமதித்தது நல்லதா? வில்லியம்சன் குழப்பம்!

post image

கிரிக்கெட் பந்தின் மீது உமிழ்நீரைப் பயன்படுத்த பிசிசிஐ அனுமதித்தது குறித்து வில்லியம்சன் பேசியுள்ளார்.

ஏன் உமிழ்நீரைப் பயன்படுத்துகிறார்கள்?

கிரிக்கெட் பந்தில் ஷைன் (பளபளப்பான), ரஃப் (சொறசொறப்பான) என இரண்டு பக்கங்கள் உள்ளன. இதில் பளபளப்பான பக்கத்தில் உமிழ்நீரைப் பயன்படுத்தினால் பந்து ஸ்விங் ஆகும் (திரும்பும்) என்பது கவனிக்கத்தக்கது.

கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 2022 -ஆம் ஆண்டு கிரிக்கெட் பந்தை பளபளப்பாக்குவதற்காக உமிழ்நீர் பயன்படுத்துவதை நிரந்தரமாக தடைசெய்வதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது.

தடை நீக்கம்

இதற்கு முதலில் எதிர்ப்புகள் எழுந்தாலும் பின்னர் நடைமுறையாக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அதனை பிசிசிஐ அனுமதித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகள் விளையாடும் மைதானங்கள் பவுண்டரி எல்லைகள் சிறியதாக இருப்பதால் பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கிறது.

தற்போது, இந்தத் தடை நீக்கத்தினால் பந்து ஸ்விங் ஆனால் பந்துவீச்சாளர்களுக்கு சிறிது சாதகமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

தடைநீக்கம் உதவுகிறதா?

இந்நிலையில் இது குறித்து கேன் வில்லியம்சன் கூறியதாவது:

வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அந்தப் பந்தினை பளபளப்பாக்குவது கடினமான ஒன்று. சமீபத்தில் ஐபிஎல் தொடரில் உமிழ்நீரை பயன்படுத்த அனுமதி அளித்தது பாதிப்பை ஏற்படுத்துமா எனத் தெரியவில்லை. அதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சிறிது உதவினாலும் அது பெரிய விஷயம்தான். உமிழ்நீரைப் பயன்படுத்தி பந்து ஸ்விங் (திரும்பினால்) ஆனால் வேகப் பந்து வீச்சாளர்களுக்கு நன்மை உண்டாகும்.

கடுமையான இந்தப் போட்டியில் உமிழ்நீர் சிறிது உதவினாலும் சிறந்ததாகத்தான் இருக்கும் எனக் கூறியுள்ளார்.

கடைசி ஓவரில் களத்தில் தோனி: சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் வெற்றி!

சென்னை: நடப்பு ஐபிஎல் தொடரின் 3-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயித்த 156 ரன்கள் இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் 19 ஓவர்களில் எட்டி முதல் வெற்றியை ருச... மேலும் பார்க்க

ஐபிஎல் சரவெடி: தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்..!

சென்னை: ஐபிஎல் 3-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற மும்பை இந்தியன்ஸ் அணி 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. வெற்றி இலக்கை நோக்கி சென்னை அணி வீரர்கள் விளையாடி வருகின்றனர். இந்த நிலை... மேலும் பார்க்க

சென்னை சூப்பர் கிங்ஸை கட்டுப்படுத்துமா மும்பை இந்தியன்ஸ்? 156 ரன்கள் வெற்றி இலக்கு

சென்னை: ஐபிஎல் 3-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற மும்பை இந்தியன்ஸ் அணி 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும் பார்க்க

சாம்சன், ஜுரெல் அதிரடி போதவில்லை: 44 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் வெற்றி!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.முதல் 6 ஓவரில் 94 ரன்கள் அடுத்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 286 ரன்கள் குவித்தது. இத... மேலும் பார்க்க

தமிழில் பேசிய ரவி சாஸ்திரி..! அதிர்ந்த சேப்பாக்கம் திடல்!

சிஎஸ்கே போட்டியின்போது டாஸை சுண்டும்போது ரவி சாஸ்திரி தமிழில் பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளத... மேலும் பார்க்க

மும்பைக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்த சிஎஸ்கே!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர்... மேலும் பார்க்க