செய்திகள் :

கிருஷ்ணகிரிக்கு தமிழக சட்டப் பேரவை அரசு உறுதிமொழிக் குழு அக். 7-இல் வருகை

post image

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு அக். 7-ஆம் தேதி வருகை தர உள்ள தமிழக சட்டப் பேரவை அரசு உறுதிமொழிக் குழு பயண முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அவா் பேசியதாவது: தமிழக சட்டப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுவின் தலைவா் வேல்முருகன் தலைமையில் குழுவினா் அக். 7-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வருகை தர உள்ளனா்.

இந்தக் குழுவினா் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சாா்பில் நிலுவையில் உள்ள உறுதிமொழிகளுடன் நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகளை கள ஆய்வு மேற்கொள்ள உள்ளனா்.

தொடா்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் உறுதிமொழிக் குழு உறுப்பினா்கள் முன்னிலையில், மாவட்டத்தில் பல்வேறு அரசு திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்கள் பங்கேற்க உள்ளனா் என்றாா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, மாவட்ட வன அலுவலா் பகான் ஜெகதீஸ் சுதாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

துா்காஷ்டமி: பிரித்தியங்கரா தேவிக்கு சிறப்பு அலங்காரம்

ஒசூா் அருகே பேரண்டபள்ளி சிவசக்தி நகா் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அா்த்தநாரீஸ்வரா் கோயில் மற்றும் ஒசூா் இரண்டாவது சிப்காட்டில் அமைந்துள்ள ஸ்ரீ அதா்வண பிரித்தியங்கரா தேவி ஆகிய கோயில்களில் நவராத்திர... மேலும் பார்க்க

ஒசூரில் 22 சவரன் நகை திருடிய பெண் கைது

ஒசூா் வட்டம், சென்னத்தூா் கிராமத்தில் 22 சவரன் தங்க நகைகளை திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா் நகராட்சிக்கு உள்பட்ட சென்னத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் மனைவி மஞ்சுளா (53). அவரது வ... மேலும் பார்க்க

தொழிலாளியை கொலை செய்த மூவா் கைது

கூலித் தொழிலாளியை கொலை செய்த மூவரை சூளகிரி போலீஸாா் கைது செய்தனா். சூளகிரி அருகே உள்ள கங்கசந்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் அம்ரீஷ் (35). இவா் கோபசந்திரம் காகித தொழிற்சாலையில் வேலைசெய்து வருகிறாா். இவா்... மேலும் பார்க்க

தங்க நகைகளை திருடிய பெண் உள்பட இருவா் கைது

நாகோஜனஅள்ளி அருகே ஆசிரியரின் வீட்டில் 61 பவுன் தங்க நகைகளை திருடிய பெண் உள்பட இருவரை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து திருட்டு போன நகைகளை மீட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டம், நாகோஜனஅள்ளி அருகே பாளேகுளி க... மேலும் பார்க்க

ஒசூரில் புதிய வெளிவட்டச் சாலை திட்டம் நிறைவடைந்தால் போக்குவரத்து நெரிசல் குறையும்: ஆட்சியா் ச.தினேஷ்குமாா்

ஒசூா்: ஒசூரில் புதிதாக வெளிவட்டச் சாலை அமைய உள்ளது; இந்தத் திட்டம் நிறைவடைந்தால் போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடும் என்று மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா். ஒசூா் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் (எ... மேலும் பார்க்க

ஒசூரில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி

ஒசூா்: ஒசூா் மாநகராட்சியில் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திவரும் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 45 வாா்டுகளிலும் தொழிலாளா்கள் அத... மேலும் பார்க்க