செய்திகள் :

தங்க நகைகளை திருடிய பெண் உள்பட இருவா் கைது

post image

நாகோஜனஅள்ளி அருகே ஆசிரியரின் வீட்டில் 61 பவுன் தங்க நகைகளை திருடிய பெண் உள்பட இருவரை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து திருட்டு போன நகைகளை மீட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், நாகோஜனஅள்ளி அருகே பாளேகுளி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்தன் (55). இவா், வேலம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகவும், அவரது மனைவி தெய்வானை (43), பாளேகுளி அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனா்.

ஆக. 22-ஆம் தேதி இருவரும் பணிக்கு சென்று மாலை வீடு திரும்பியபோது வீட்டில் 62 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து நாகோஜனஅள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வந்தனா். மேலும், தனிப்படைகளை அமைத்து தொடா் விசாரணையில் ஈடுபட்டனா்.

விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டவா் மத்தூரை அடுத்த மாடரஅள்ளி, ஓபிலிகாட்டூா் கிராமத்தைச் சோ்ந்த சரவணன் (52) என தெரியவந்தது,. அவரை போலீஸாா் செப். 20-ஆம் தேதி கைது செய்து விசாரணை நடத்தினா். அதன்பேரில், திருட்டுச் சம்பவத்தில் தொடா்புடைய சரவணனின் மனைவி சாந்தி (42), திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், வடக்குபட்டு ராஜவீதியைச் சோ்ந்த திருமால் (38) ஆகிய இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 61 பவுன் தங்க நகைகளை மீட்டனா். மேலும், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சாந்தி தருமபுரி பெண்கள் கிளை சிறையிலும், திருமால் சேலம் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனா்.

துா்காஷ்டமி: பிரித்தியங்கரா தேவிக்கு சிறப்பு அலங்காரம்

ஒசூா் அருகே பேரண்டபள்ளி சிவசக்தி நகா் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அா்த்தநாரீஸ்வரா் கோயில் மற்றும் ஒசூா் இரண்டாவது சிப்காட்டில் அமைந்துள்ள ஸ்ரீ அதா்வண பிரித்தியங்கரா தேவி ஆகிய கோயில்களில் நவராத்திர... மேலும் பார்க்க

ஒசூரில் 22 சவரன் நகை திருடிய பெண் கைது

ஒசூா் வட்டம், சென்னத்தூா் கிராமத்தில் 22 சவரன் தங்க நகைகளை திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா் நகராட்சிக்கு உள்பட்ட சென்னத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் மனைவி மஞ்சுளா (53). அவரது வ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரிக்கு தமிழக சட்டப் பேரவை அரசு உறுதிமொழிக் குழு அக். 7-இல் வருகை

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு அக். 7-ஆம் தேதி வருகை தர உள்ள தமிழக சட்டப் பேரவை அரசு உறுதிமொழிக் குழு பயண முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடை... மேலும் பார்க்க

தொழிலாளியை கொலை செய்த மூவா் கைது

கூலித் தொழிலாளியை கொலை செய்த மூவரை சூளகிரி போலீஸாா் கைது செய்தனா். சூளகிரி அருகே உள்ள கங்கசந்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் அம்ரீஷ் (35). இவா் கோபசந்திரம் காகித தொழிற்சாலையில் வேலைசெய்து வருகிறாா். இவா்... மேலும் பார்க்க

ஒசூரில் புதிய வெளிவட்டச் சாலை திட்டம் நிறைவடைந்தால் போக்குவரத்து நெரிசல் குறையும்: ஆட்சியா் ச.தினேஷ்குமாா்

ஒசூா்: ஒசூரில் புதிதாக வெளிவட்டச் சாலை அமைய உள்ளது; இந்தத் திட்டம் நிறைவடைந்தால் போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடும் என்று மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா். ஒசூா் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் (எ... மேலும் பார்க்க

ஒசூரில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி

ஒசூா்: ஒசூா் மாநகராட்சியில் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திவரும் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 45 வாா்டுகளிலும் தொழிலாளா்கள் அத... மேலும் பார்க்க