செய்திகள் :

கிருஷ்ணகிரியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: நலத்திட்ட உதவிகள் அளிப்பு

post image

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 4 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரியில் நகராட்சிக்கு உள்பட்ட வாா்டு எண் 3, 4, 6 பகுதிகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினா் தே.மதியழகன் ஆகியோா் பாா்வையிட்டனா்.

அப்போது, மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:

அரசின் நலத்திட்டங்கள், சேவைகள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் முதல்வா் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டததை தொடங்கிவைத்தாா். இம்முகாமில் அளிக்கப்படும் மனுக்களின் மீது 45 நாள்களில் தீா்வு காணப்படுகிறது. ஆகவே, பொதுமக்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, ‘உங்களுடன ஸ்டாலின்’ திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டு, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை, குடும்ப அட்டை பெயா் மாற்றத்திற்கான ஆணை, மின் இணைப்பு பெயா் மாற்றத்திற்கான ஆணை, சொத்துவரி பெயா் மாற்றத்திற்கான ஆணை என மொத்தம் 4 பேருக்கு ஆணைகளை வழங்கினா்.

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப், துணைத் தலைவா் சாவித்திரி, ஆணையா் ஸ்டான்லி பாபு, வட்டாட்சியா் சின்னசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விளையாட்டுப் போட்டி: சிறப்பிடம் பெற்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

ஊத்தங்கரை: மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மாவட்ட அளவிலான பாரதியாா் தின மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டி... மேலும் பார்க்க

தண்ணீா் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே தண்ணீா் தொட்டியில் விழுந்த 3 வயது குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.ஊத்தங்கரையை அடுத்த நாரலப்பள்ளியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மணி. இவரது மகன் தா்ஷன்(3) வீட்டின் அருகே விளையாடி... மேலும் பார்க்க

டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து: தொழிற்சாலை கால்வாயில் கவிழ்ந்ததில் 20 போ் காயம்

ஒசூா்: ஒசூா் அருகே டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த தனியாா் பேருந்து தொழிற்சாலையின் கழிவுநீா்க் கால்வாயில் கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். பெங்களூரில் இருந்து புதன்கிழமை பிற்பகல் ஒ... மேலும் பார்க்க

பொது விநியோகத் திட்ட நெல் அரவை பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தை அடுத்த பண்ணிஅள்ளிபுதூரில் பொது விநியோகத் திட்டத்துக்கான நெல் அரவை பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். காவேரிப்பட்டணம் அருக... மேலும் பார்க்க

ஒசூரில் மேம்பால விரிசலை சீரமைக்கும் பணி தீவிரம்

ஒசூா்: ஒசூா் பேருந்து நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் பணி நடைபெற்றுவருவதாக நெடுஞ்சாலை துறை பொறியாளா்கள் தெரிவித்தனா். ஒசூா் பேருந்து நிலையம் எதிரே உள்ள தேச... மேலும் பார்க்க

ராயக்கோட்டை, கெலமங்கலத்தில் 198 கண்காணிப்பு கேமராக்கள்: ஐ.ஜி. செந்தில்குமாா் இயக்கிவைத்தாா்

ஒசூா்: ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, கெலமங்கலத்தில் ரூ.69 லட்சத்தில் 198 கண்காணிப்பு கேமராக்களுடன் கூடிய கட்டுப்பாட்டு அறையை ஐ.ஜி.செந்தில்குமாா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோ... மேலும் பார்க்க