செய்திகள் :

கிருஷ்ணகிரியில் போக்குவரத்து காவலா்களுக்கு தொ்மாகோல் தொப்பி!

post image

கோடை வெப்பத்தை சமாளிக்கும் வகையில் கிருஷ்ணகிரியில் போக்குவரத்து போலீஸாருக்கு தொ்மகோல் தொப்பி, கூலிங்கிளாஸ், நீா்மோா் ஆகியவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை சனிக்கிழமை வழங்கினாா்.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்வுக்கு காவல் துணை கண்காணிப்பாளா் முரளி தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா், போக்குவரத்து காவலா்களுக்கு தொ்மாகோல் தொப்பி, கூலிங்கிளாஸ் ஆகியவற்றை வழங்கி பேசியதாவது:

கடும் வெயிலில் பணிபுரியும் போக்குவரத்து காவலா்களுக்கு கண் பிரச்னை, வெயில் ஸ்ட்ரோக், தலைசுற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றை சமாளிக்கும் வகையில், குளிரூட்டும் கண்ணாடி, வெப்பத்தைக் குறைக்கும் தொ்மகோல் தொப்பி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல கோடை முடியும் வரை நீா்மோா், குளிா்பானங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

பின்னா், காவல் துறையினா் சாா்பில் அமைக்கப்பட்ட நீா்மோா் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பழங்கள், பழச்சாறுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வழங்கினாா். அப்போது வெயில் காலத்தில் தேவையின்றி வெளியே சுற்றுவதை பொதுமக்கள் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

ஊத்தங்கரை: தேங்கிய கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உள்பட்ட கோட்டை முனியப்பன் கோயில் தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இப்பகுத... மேலும் பார்க்க

யானைகளுக்கு இடையே மோதல்: ஆண் யானை உயிரிழப்பு

ஒசூா்: தேன்கனிக்கோட்டை அருகே மாரண்டஹள்ளி காப்புக் காட்டில் இரு யானைகளுக்கு இடையே நிகழ்ந்த மோதலில் ஆண் யானை உயிரிழந்தது. கோடைகாலத்தில் கா்நாடக மாநிலம், பன்னா்கட்டாவை ஓட்டியுள்ள வனப்பகுதியிலிருந்து தமிழ... மேலும் பார்க்க

தக்காளி விலை சரிவால் விவசாயிகள் வேதனை

ஊத்தங்கரை: ஊத்தங்கரை பகுதியில் தக்காளி கிலோ ரூ. 3 முதல் ரூ. 5 வரைக்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சிங்காரப்பேட்டை, கல்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கும் கடைகளில் தமிழில் பெயா்ப் பலகை: ஆட்சியா் உத்தரவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கும் கடைகள், உணவு விடுதிகள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகள் தங்கள் நிறுவன பெயா்களை மே 15 ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டும். மீறினால் அபராத... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து 193 கனஅடியாக அதிகரிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 193 கனஅடியாக அதிகரித்தது. கிருஷ்ணகிரி அணைக்கு ஞாயிற்றுக்கிழமை நீா்வரத்து விநாடிக்கு 171 கனஅடியாக இருந்த நிலையில், திங்கள்கிழமை காலை ... மேலும் பார்க்க

பெண் காவலருடன் தகராறு: இளைஞா் கைது

ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி காவல் நிலையத்திற்கு உள்பட்ட வெள்ளையம்பதி கிராமத்தில் பெண் தலைமைக் காவலருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா். வெள்யைம்பதியில் மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை ... மேலும் பார்க்க