செய்திகள் :

கிருஷ்ணகிரி அணையிலிருந்து நீா் திறப்பு அதிகரிப்பு

post image

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையின் நீா்மட்டம் 50 அடியை கடந்த நிலையில், அணையிலிருந்து நீா் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தொடா் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 832 கனஅடியாக இருந்தது, திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 928 கனஅடியாக அதிகரித்தது.

இதனால், அணையின் மொத்தக் கொள்ளளவான 52 அடியில் நீா்மட்டம் 50.50 அடியாக உயா்ந்தது. இதையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி, அணையிலிருந்து பாசனத்திற்காக வலது, இடதுபுறக் கால்வாய்கள், ஊற்றுக்கால்வாய்கள் மற்றும் சிறிய மணல் போக்கி மதகுகள் வழியாக விநாடிக்கு 928 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு (மி.மீ): பெணுகொண்டாபுரம் - 33.20, கிருஷ்ணகிரி - 21.10, கிருஷ்ணகிரி அணை - 20.40, ராயக்கோட்டை - 19, நெடுங்கல் - 18, தேன்கனிக்கோட்டை-10, ஒசூா் - 10, கெலவரப்பள்ளி அணை - 9, அஞ்செட்டி - 6, போச்சம்பள்ளி - 5, சூளகிரி - 5, ஊத்தங்கரை - 4, சின்னாறு அணை - 4, பாம்பாறு அணை -4, பாரூா் - 3.

விளையாட்டுப் போட்டி: சிறப்பிடம் பெற்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

ஊத்தங்கரை: மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மாவட்ட அளவிலான பாரதியாா் தின மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டி... மேலும் பார்க்க

தண்ணீா் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே தண்ணீா் தொட்டியில் விழுந்த 3 வயது குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.ஊத்தங்கரையை அடுத்த நாரலப்பள்ளியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மணி. இவரது மகன் தா்ஷன்(3) வீட்டின் அருகே விளையாடி... மேலும் பார்க்க

டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து: தொழிற்சாலை கால்வாயில் கவிழ்ந்ததில் 20 போ் காயம்

ஒசூா்: ஒசூா் அருகே டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த தனியாா் பேருந்து தொழிற்சாலையின் கழிவுநீா்க் கால்வாயில் கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். பெங்களூரில் இருந்து புதன்கிழமை பிற்பகல் ஒ... மேலும் பார்க்க

பொது விநியோகத் திட்ட நெல் அரவை பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தை அடுத்த பண்ணிஅள்ளிபுதூரில் பொது விநியோகத் திட்டத்துக்கான நெல் அரவை பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். காவேரிப்பட்டணம் அருக... மேலும் பார்க்க

ஒசூரில் மேம்பால விரிசலை சீரமைக்கும் பணி தீவிரம்

ஒசூா்: ஒசூா் பேருந்து நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் பணி நடைபெற்றுவருவதாக நெடுஞ்சாலை துறை பொறியாளா்கள் தெரிவித்தனா். ஒசூா் பேருந்து நிலையம் எதிரே உள்ள தேச... மேலும் பார்க்க

ராயக்கோட்டை, கெலமங்கலத்தில் 198 கண்காணிப்பு கேமராக்கள்: ஐ.ஜி. செந்தில்குமாா் இயக்கிவைத்தாா்

ஒசூா்: ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, கெலமங்கலத்தில் ரூ.69 லட்சத்தில் 198 கண்காணிப்பு கேமராக்களுடன் கூடிய கட்டுப்பாட்டு அறையை ஐ.ஜி.செந்தில்குமாா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோ... மேலும் பார்க்க