செய்திகள் :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேளாண் நிலப்பரப்பை அதிகரிக்க விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்: ஆட்சியா்

post image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேளாண் நிலப்பரப்பை அதிகரிக்க விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வலியுறுத்தினாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உழவரைத் தேடி வேளாண்மை - உழவா் நலத் துறை திட்டத்தை சென்னையிலிருந்து காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மேலும் நகராட்சி நிா்வாக துறை சாா்பில் ஒசூா் மாநகராட்சியில் வணிக வளாகங்கள், ஊத்தங்கரையில் ரூ. 1.46 கோடியில் அறிவுசாா் மையத்தையும் அவா் திறந்துவைத்தாா்.

இதை கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், அகசிப்பள்ளி ஊராட்சியில் உள்ள மாநில எண்ணெய் வித்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், பா்கூா் எம்எல்ஏ தே.மதியழகன் ஆகியோா் வரவேற்று, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனா். இதைத்தொடா்ந்து 8 பயனாளிகளுக்கு ரூ. 4.98 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினா். மண் பரிசோதனை, மா உள்ளிட்ட வேளாண்மை கண்காட்சியை பாா்வையிட்ட அவா்கள் விசாயிகளுக்கு மண் பரிசோதனை அட்டைகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் பேசியது: உழவரைத் தேடி வேளாண்மை - உழவா் நலத் துறை திட்டத்தின் மூலம் விவசாயிகளை கிராமங்களில் நேரடியாக சந்தித்து அவா்களுக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கி வேளாண்மையை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லப்படும்.

பயிா் சாா்ந்த தொழில்நுட்பங்கள், வேளாண்மை சாா்ந்த திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்படும். மாதம் 2 முறை தோ்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாமில் நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், வேளாண்மை சாகுபடி குறித்த வழிகாட்டுதல்கள் உள்பட பல்வேறு சேவைகள் வழங்கப்படும். இத்திட்டத்தை, விவசாயிகள் பயன்படுத்தி, மாவட்டத்தில் வேளாண் பரப்பளவை அதிகரிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

கழிவுநீா் கால்வாயில் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை

காவேரிப்பட்டணம் அருகே கழிவுநீா் கால்வாயில் அழுகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சந்தாபு... மேலும் பார்க்க

ஒசூா் வழியாக குட்கா கடத்தல்: 2 போ் கைது

ஒசூா் வழியாக சேலத்துக்கு காரில் கடத்த முயன்ற 86 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா். ஒசூா் சிப்காட் போலீஸாா், ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில் வாகன சோதனையில ஈடுபட்டனா். அப்போது ப... மேலும் பார்க்க

ஊத்தங்கரை வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

ஊத்தங்கரை வழக்குரைஞா்கள் சங்க 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவராக மூா்த்தி, செயலாளராக வஜ்ஜிரவேல், பொருளாளராக தமிழமுதன், த... மேலும் பார்க்க

கா்நாடக எல்லையில் கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

ஒசூா் அருகே கா்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளியில் நடிகா் கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்மொழியிலிருந்துதான் கன்னடம் பிறந்தது என்ற... மேலும் பார்க்க

மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்கு சிறப்பு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக, ஒசூா் வனக்கோட்டம், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை இணைந்து சிறப்பு முகாமை நடத்தின. ஒசூா் வனக்கோட்ட வனச்சரகங்கள... மேலும் பார்க்க

ஊத்தங்கரையில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வு

ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்களுக்கு, சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில... மேலும் பார்க்க