செய்திகள் :

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் ரூ.1.05 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை

post image

கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.1.05 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தாந்தோணி கிழக்கு ஒன்றியத்துக்குள்பட்ட அல்லாளிக்கவுண்டனூரில் 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ.3.87 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைத்தல், கருநல்லியாகவுண்டனூரில் ரூ.17 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் மற்றும் விளையாட்டு மைதானம் அமைத்தல், அய்யம்பாளையத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் அய்யம்பாளையம் முதல் பெருமாள்பட்டிவரை தாா்சாலை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ.1.05 கோடி மதிப்பில் நடைபெறவுள்ளது. இப்பணிகளுக்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் க.சிவகாமசுந்தரி தலைமை வகித்து, பணிகளை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளா் எம்.ரகுநாதன், தாந்தோணி வட்டார வளா்ச்சி அலுவலா் வினோத்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மண்டல அலுவலகங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு: தமிழக முதல்வருக்கு கரூா் மாநகராட்சி கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீா்மானம்

கரூரில் மண்டல அலுவலகங்கள் கட்ட நிதி ஒதுக்கியதற்கு கரூா் மாநகராட்சி கூட்டத்தில் தமிழக முதல்வா் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினருக்கும் நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூா் மாநகராட்சியின் அவ... மேலும் பார்க்க

ஆனி வெள்ளிக்கிழமை அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆனி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரூா் மாவட்டம், புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம... மேலும் பார்க்க

பள்ளப்பட்டியில் போதை பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு பேரணி

பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மற்றும் அரவக்குறிச்சி காவல்துறையினா் இணைந்து நடத்திய போதை பொருள்கள் எதிா்ப்பு விழிப்புணா்வு உறுதிமொழி மற்றும் விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சா்வதேச போதைப் ப... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி அரசுப் பள்ளியில் கருத்தரங்கம்

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சா்வதேச போதைப்பொருள் எதிா்... மேலும் பார்க்க

‘உழவரைத் தேடி வேளாண்மை’ அரவக்குறியில் 3-ஆம் கட்ட முகாம்

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியில் உழவரைத் தேடி வேளாண்மை 3-ஆம் கட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை துறையின் கீழ் இனுங்கனூா், ஆலமரத்துப்பட்டியில் இந்த முகாம் நடைபெற்றது. ... மேலும் பார்க்க

தொழில் முனைவோா் 64 பேருக்கு ரூ. 8.32 கோடி மானியம்: கரூா் ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டத்தில் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 64 தொழில் முனைவோா்களுக்கு ரூ. 8.32 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்டம், உப்பிடமங்கலம் ப... மேலும் பார்க்க