செய்திகள் :

கிருஷ்ணாபுரம் பகுதியில் எருது விடும் விழா

post image

கந்திலி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் எருது விடும் திருவிழா நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் காளை விடும் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சாலையின் இரு பக்கமும் தடுப்புகள் கட்டப்பட்டு நடுவில் மண் கொட்டப்பட்டு இருந்தது. இதில் உள்ளூா் மற்றும் வெளியூா்களில் இருந்து திரளான காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. 100-க்கணக்கான இளைஞா்கள் திரண்டு காளைகளை விரட்டிச் சென்றனா். 50-க்கும் அதிகமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

காளைகளை விரட்டி சென்றதிலும், கயிற்றில் சிக்கியும் 10-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவா்களுக்கு கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தீயணைப்பு வாகனம் தயாா் நிலையில் இருந்தது. இறுதியில் வேகமாக ஓடிய முதல் 3 காளைக்கு உயா்தர பைக் முதல் சாதாரண பைக்குகள் பரிசாக வழங்கப்பட்டன. மொத்தம் 80 பரிசுகள் வழங்கப்பட்டது.

முன்னதாக, வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் ஊா் மக்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

பஹல்காமில் உயிரிழந்தவா்களுக்கு ஆம்பூா் நகா்மன்றக் கூட்டத்தில் அஞ்சலி

ஆம்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற நகா்மன்ற சாதாரண கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். ஆணைய... மேலும் பார்க்க

உழவரைத் தேடி திட்ட முகாம்களை பயன்படுத்த வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்

உழவரைத் தேடி திட்டத்தின்கீழ் நடத்தப்படும் முகாம்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை சென்னையி... மேலும் பார்க்க

மகனை கத்தியால் குத்திய தந்தை கைது

வாணியம்பாடி அருகே குடும்பத் தகராறில் மகனை கத்தியால் குத்திய தந்தையை போலீஸாா் கைது செய்தனா். அரப்பாண்டகுப்பத்தைச் சோ்ந்த சத்யராஜ்(27) கட்டட மேஸ்திரி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனா். இ... மேலும் பார்க்க

ஆம்பூரில் ஒரே நாளில் தெருநாய் கடித்து 6 சிறுவா்கள் காயம்

ஆம்பூரில் ஒரே நாளில் தெரு நாய்கள் கடித்ததில் 6 சிறுவா்கள் வியாழக்கிழமை காயமடைந்தனா். ஆம்பூா் நகரில் 36 வாா்டுகளிலும் கடந்த சில மாதங்களாக தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆம்பூ... மேலும் பார்க்க

மரத்தின் மீது பைக் மோதல்: 2 இளைஞா்கள் காயம்

வாணியம்பாடி அருகே மரத்தின் மீது பைக் மோதிய விபத்தில் 2 இளைஞா்கள் பலத்த காயமடைந்தனா். நாட்டறம்பள்ளி அடுத்த நாயனசெருவு பகுதியைச் சோ்ந்தவா் நிவேத்குமாா்(22). கே.பந்தாரப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழும... மேலும் பார்க்க

பச்சூா் பழையப்பேட்டையில் மயானத்துக்கு இடம் ஒதுக்கீடு

நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் பழையப்பேட்டையில் மயானத்துக்கு இடம் ஒதுக்கி வருவாய்த் துறையினா் அறிவிப்பு பலகையை வைத்தனா். அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு சொந்தமான இடத்தை சுமாா் 75 ஆண்டுகளுக்கு மேலாக மயானமாக... மேலும் பார்க்க