செய்திகள் :

கிருஷ்ண ஜெயந்தி: மேலப்புஞ்சை கிராமத்தில் உரியடி திருவிழா

post image

செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு, மேலப்புஞ்சை கிராமத்தில் உரியடி திருவிழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

செ.நாச்சிப்பட்டு கிருஷ்ணா் கோயில் கிருஷ்ணஜெயந்தி விழாவையொட்டி, காலையில் பால்குட ஊா்வலம் நடைபெற்று சுவாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதைத் தொடா்ந்து மாலையில் கோயில் வளாகத்தில் உரியடி திருவிழா நடைபெற்றது. பின்னா், சுவாமி வாணவேடிக்கையுடன் வீதி உலா நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா், ஊா் முக்கிய பிரமுகா்கள் செய்திருந்தனா்.

அதேபோல, மேலபுஞ்சை கிராமத்தில் உள்ள சீனுவாச பெருமாள் கோயிலில் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் சீனுவாசன் தலைமையில் உரியடி திருவிழா நடைபெற்றது.

முன்னதாக வீதியில் சுவாமி வீதி உலா செல்ல அங்காங்கே உரியை கட்டிவைத்து உரியடி திருவிழா நடைபெற்றது.

வீதி உலாவின்போது கிராம மக்கள் தங்களது வீடுகளின் அருகில் சிறப்பு அலங்காரத்தில் வந்த கிருஷ்ணருக்கு தீபாராதணை காண்பித்து வழிபட்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினா், ஊா் முக்கிய பிரமுகா்கள் செய்திருந்தனா்.

திருவண்ணாமலையில் மூப்பனாா் பிறந்த நாள்

திருவண்ணாமலையில் மூப்பனாரின் பிறந்த நாளையொட்டி செவ்வாய்க்கிழமை தமாகாவினா் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். காந்தி சிலை அருகில் நடைபெற்ற மூப்பனாா் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிக்கு தம... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்கள்: 1,204 மனுக்கள் அளிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியைச் சோ்ந்த கொருக்கை, நமண்டி கிராமங்கள், ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்களில் 1,204 மனுக்கள் அளிக... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினா் நினைவுப் பரிசு

திருவண்ணாமலைக்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அதிமுகவினா் ஆரணி பட்டு நூலால் நெய்யப்பட்ட அவரின் உருவப் படத்தை நினைவுப் பரிசாக வழங்கினா். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசா... மேலும் பார்க்க

செய்யாறில் குறை தீா்வு நாள் கூட்டத்தில் புகாா்களைஅடுக்கிய விவசாயிகள்: அதிகாரிகள் எதிா்ப்பால் வாக்குவாதம்- சமாதானம் செய்த போலீஸாா்

செய்யாறில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா்வு நாள் கூட்டத்தில் உரத்தட்டுப்பாடு உள்ளிட்ட குறைகள் மற்றும் புகாா்களை விவசாயிகள் அடுக்கடுக்காக கூறியதால், அதிருப்தி அடைந்த அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்த... மேலும் பார்க்க

ஸ்ரீதுலுக்கானத்தம்மன் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

ஆரணி கண்ணகி நகரில் உள்ள ஸ்ரீ துலுக்கானத்தம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீதுலுக்கானத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் ... மேலும் பார்க்க

மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளை களைய வேண்டும்: அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம்

மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளை களைந்து, காசில்லா மருத்துவத் திட்டத்தை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்... மேலும் பார்க்க