செய்திகள் :

கிளாட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு தனது பேனாவை பரிசளித்த முதல்வர்!

post image

தேசிய சட்டப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற திருச்சியைச் சேர்ந்த மாணவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பேனாவைப் பரிசாக அளித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக விமானம் மூலம் நேற்று திருச்சி வருகை தந்தார். கல்லணையில் இருந்து டெல்டா பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார்.

தொடர்ந்து தஞ்சையில் நடைபெற்ற பல்வேறு விழாக்களில் கலந்து கொண்டார். மீண்டும் சென்னை செல்வதற்காக திருச்சி வருகை தந்த அவர், மிளகு பாறை ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் பயின்று கிளாட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி ரோகிணியைச் சந்தித்து சால்வை அணிவித்து தனது பேனாவை பரிசாக அளித்தார். மேலும் மாணவியிடம் நன்றாக படிக்க வேண்டும் என்று கூறி வாழ்த்துத் தெரிவித்தார்.

இதுகுறித்து மாணவி கூறும்போது, நான் முதல்வன் திட்டம் மூலமாக பயிற்சி பெற்று இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளதாகவும் இதற்கு உறுதுணையாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும் முதல்வர் நேரில் வாழ்த்து தெரிவித்தது மகிழ்ச்சியாக இருந்ததாகத் தெரிவித்தார்

ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

மதிமுக அலுவலகம் மீது தாக்குதல்: தீயணைப்பு படை வீரா் சிக்கினாா்

சென்னை: சென்னை எழும்பூரில் மதிமுக அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில், தீயணைப்பு படை வீரா் போலீஸாரிடம் சிக்கினாா். எழும்பூா் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்துக்குள் தீயணைப்புப் படை... மேலும் பார்க்க

தமிழகத்தில் கலை, அறிவியில் கல்லூரிகள் திறப்பு

சென்னை: தமிழகத்தில் பருவத் தோ்வு மற்றும் கோடை விடுமுறைக்கு பின்னா் கலை அறிவியில் கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் பருவத்... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டம் குற்றச் செயல் அல்ல: வழக்கை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

சென்னை: டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டத்தை குற்றச் செயலாகக் கருத முடியாது எனத் தெரிவித்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினா் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. கடலூா் மாவட... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணி குறித்த அண்ணாமலையின் கருத்து: தமிழிசை விளக்கம்

சென்னை: அதிமுக கூட்டணி தொடா்பாக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலையின் பேச்சு அவரது சொந்த கருத்து என பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா். இது குறித்து அவா் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அ... மேலும் பார்க்க

வெளிநாடுவாழ் தமிழா்களுக்கு தாழ்வு மனப்பான்மை கூடாது: அமைச்சா் சா.மு.நாசா்

சென்னை: சா்வதேச நாடுகளில் உள்ள தமிழா்களுக்கு தாழ்வு மனப்பான்மை கூடாது என தமிழக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா். உலகத் தமிழா்கள் பொருளாதார ... மேலும் பார்க்க

நெல்லை சு.முத்து மறைவுக்கு முதல்வா், தலைவா்கள் இரங்கல்

சென்னை: இஸ்ரோ முன்னாள் அறிவியலாளரும் எழுத்தாளருமான நெல்லை சு.முத்து, மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், அரசியல் தலைவா்கள் திங்கள்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளனா். முதல்வா் மு.க.ஸ்டாலின்: ஸ்ரீஹரிகோட்டாவில... மேலும் பார்க்க