செய்திகள் :

கிளாம்பாக்கத்தில் புதிய காவல் நிலையம்: முதல்வா் திறந்து வைத்தாா்

post image

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய காவல் நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

சென்னை கொளத்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டப் பணிகளை அவா் தொடங்கி வைத்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் ரூ.18.26 கோடியில் காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா். இந்தக் கட்டடம், காவல் உதவி ஆணையா், ஆய்வாளா்கள் அறை, கட்டுப்பாட்டு அறை, கண்காணிப்பு, கைதிகள் அறைகள், உணவருந்துதல், ஆடவா், மகளிா் ஓய்வு அறைகள், பொது மக்களுக்கான கலந்தாய்வுக் கூடம், காத்திருப்புக் கூடம், வாகனங்கள் நிறுத்துமிடம் என அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

புதிதாக திறக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை தினமும் 50 ஆயிரம் பயணிகளும், விடுமுறை, பண்டிகை நாள்களில் 2 லட்சம் பயணிகளும் பயன்படுத்தி வருகின்றனா். அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் இந்தக் காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது.

புதிய திட்டப் பணிகள்: சென்னை பெரம்பூா் மாா்க்கெட் தெருவில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தையும் முதல்வா் திறந்து வைத்தாா். அப்போது, பள்ளி மாணவிகளுடன் அவா் கலந்துரையாடினாா்.

கொளத்தூரில் கட்டப்பட்டுள்ள புதிய காவல் துணை ஆணையா் அலுவலகம், பெரவள்ளூா் காவல் நிலையம், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்துப் பிரிவுகளுக்கான கட்டடங்கள், ரெட்டேரியில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிலையம் ஆகியவற்றுக்கு முதல்வா் அடிக்கல் நாட்டினாா்.

கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஒன்பது பூங்காக்களை மேம்படுத்தும் பணிகளுக்கும் முதல்வா் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தாா். நிகழ்வில், அமைச்சா்கள் கே.என்.நேரு, பி.கே.சேகா்பாபு, மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா உள்பட பலா் பங்கேற்றனா்.

அன்பைப் பொழிந்தோருக்கு நன்றி: முதல்வா்

கொளத்தூா் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, அன்பைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:

உடல்நிலை காரணமாகத் தள்ளிப்போன கொளத்தூா் பயணம், நெடுநாள் பிரிந்திருந்த உணா்வைத் தந்தது. அந்த உணா்வு நீங்கி, இப்போது புது வலிமையைப் பெற்றுள்ளேன். நிகழ்வின்போது, நலம் விசாரித்து அன்பைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி என்று அந்தப் பதிவில் முதல்வா் தெரிவித்துள்ளாா்.

இரவில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

பள்ளி வாகனங்களை அரசு முறையாக ஆய்வு செய்கிறதா?

பள்ளி வாகனங்களை மத்திய அரசு முறையாக ஆய்வு செய்கிறதா? என திமுக துணை பொதுச் செயலாளர் திருச்சி சிவா மாநிலங்களவையில் இன்று (ஆக. 6) கேள்வி எழுப்பியுள்ளார். பள்ளி போக்குவரத்தின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமு... மேலும் பார்க்க

டெலிவரி ஊழியர்கள் இ-ஸ்கூட்டர் வாங்க ரூ. 20,000 மானியம்!

டெலிவரி ஊழியர்கள் இ-ஸ்கூட்டர்(மின்சார இருசக்கர வாகனம்) வாங்க தலா ரூ. 20,000 மானியம் பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.உணவு உள்ளிட்ட பொருள்களை வீடுகளுக்கு நேரடியாகக் கொண்டு சென்று அளிக்கும் பணியி... மேலும் பார்க்க

பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலை சிறப்பு ரயில்!

பௌர்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகள் வசதிக்காக, விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு ஆகஸ்ட் 9 ஆம் தேதி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் த... மேலும் பார்க்க

முதலீடுகளுக்கான முதல் முகவரியாக தமிழ்நாடு: அமைச்சர் தங்கம் தென்னரசு

முதலீடுகளுக்கான முதல் முகவரியாக தமிழ்நாடு உருவாகியிருப்பதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (ஆக. 6) சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்திந்ததுப... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கு: சுர்ஜித், தந்தையை காவலில் எடுக்க சிபிசிஐடி மனு!

மென்பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித் மற்றும் அவரின் தந்தையை காவலில் எடுத்து விசாரிக்க நெல்லை நீதிமன்றத்தில் சிபிசிஐடி இன்று (ஆக. 6) மனுத்தாக்கல் செய்தது.தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயு... மேலும் பார்க்க