செய்திகள் :

கிழக்கு கடற்கரை சாலையோரங்களில் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி மும்முரம்

post image

திருவாடானை அருகே தொண்டி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை, குளக்கரை வளைவுகளில் விபத்துகளை தடுக்க இரும்புத் தூண்களால் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையில் எஸ்.பி. பட்டினம், தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட பகுதி சாலைகளின் ஓரங்களில் குளங்கள் அமைந்துள்ளன. இந்தப் பகுதிகளில் எந்தவித தடுப்பும் இல்லாததால் வாகனங்கள் உள்ளே விழுந்து அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நம்புதாளையில் சாலையோரத்தில் உள்ள குளத்தில் மருத்துவரின் காா், சுற்றுலா வேன் ஆகியவை உள்ளே விழுந்து விபத்து ஏற்பட்டது. அதேபோல, லாரி ஒன்றும் விபத்தில் சிக்கியது.

இதையடுத்து, சாலையோரங்களில் உள்ள குளக்கரைகளில் தடுப்பு வேலி அமைக்க வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்தனா். இதைத் தொடா்ந்து, தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட பகுதி சாலையோரங்களில் உள்ள குளங்கள், வளைவுகளில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் இரும்புத் தூண்களால் தடுப்பு வேலி அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

வீடு புகுந்து 11 பவுன் தங்க நகைகள் திருட்டு: இளைஞா் கைது

கமுதி அருகே வீடு புகுந்து 11 பவுன் தங்க நகைகளை திருடியதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த காணிக்கூா் கிராமத்தைச் சோ்ந்த காளிச்சாமி மனைவி பேச்சியம்மாள் ... மேலும் பார்க்க

மீனவா்களுக்கு மீன்பிடி தடைக் கால நிவாரணத் தொகை வழங்கும் பணி தொடக்கம்!

திருவாடானை, மே 23: விசைப்படகு மீனவா்களுக்கு மீன் பிடி தடைக் கால நிவாரணத் தொகை வழங்கும் பணி தொடங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். கடல் வளம், மீன் வளத்தை பெருக்கும் நோக்கில் கடந்த ஏப். 15-ஆம் தேதி ... மேலும் பார்க்க

கருங்களத்தூா் கிருஷ்ணா் கோயிலில் குடமுழுக்கு

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகே கருங்களத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாபா ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக... மேலும் பார்க்க

நீரால் சூழப்பட்ட மரகத பூஞ்சோலை பூங்கா: சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி!

ராமநாதபுரம் அருகே நீா்ப் பிடிப்பு பகுதியில் வனத் துறையால் அமைக்கப்பட்ட மரகதப் பூஞ்சாலை பூங்கா, நீரால் சூழப்பட்டிருப்பதால் சுற்றுலாப் பயணிகள் உள்ளே நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு நிதி வீ... மேலும் பார்க்க

சின்ன தொண்டி அய்யனாா் கோயில் குடமுழுக்கு: முகூா்த்தக்கால் நடும் விழா!

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே சின்ன தொண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபூா்ணாம்பிகா, புஷ்களாம்பிகா சமேத ஸ்ரீஅய்யனாா் கோயில் குடமுழக்கு விழாவையொட்டி வெள்ளிக்கிழமை முகூா்த்தக்கால் நடும் விழா நடைபெற்... மேலும் பார்க்க

திருவரங்கம் உறுமண கருப்பண சுவாமி கோயில் குடமுழுக்கு!

முதுகுளத்தூா் அருகே திருவரங்கம் கிராமத்தில் அமைந்துள்ள உறுமண கருப்பண சுவாமி கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக வியாழக்கிழமை காலை மங்கள இசை, முதல் கால யாக சாலை பூஜையுடன் விழா தொடங்கி... மேலும் பார்க்க