செய்திகள் :

கீழக்கரையில் கல்லூரிப் பேராசிரியா்களுக்கான கிரிக்கெட் போட்டி

post image

கீழக்கரை சையது ஹமிதா கலை, அறிவியல் கல்லூரியில் பேராசிரியா்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

அழகப்பா பல்கலைக்கழக 12 உறுப்பு கல்லூரிகளின் பேராசிரியா்களுக்கான கிரிக்கெட் போட்டி கடந்த மூன்று நாள்களாக சையது ஹமிதா கலை, அறிவியல் கல்லூரி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதல் இடத்தை அழகப்பா பல்கலைக்கழக அணியும், இரண்டாம் இடத்தை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலைக் கல்லூரி தேவகோட்டை அணியும், மூன்றாம் இடத்தை முத்துப்பேட்டை கௌசானல் கல்லூரி அணியும் வென்றன.

இதற்கான பரிசளிப்பு விழாவில், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் ரவி கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக் கோப்பைகளை வழங்கினாா். இதில், அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினா் ஜெயகாந்தன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா். முன்னதாக, கல்லூரி முதல்வா் எஸ். ராஜசேகா் வரவேற்றாா்.

அக்னி தீா்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற பக்தா்கள் கோரிக்கை

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். மன்னாா் வளைகுடா, பாக்நீரினை கடல் பகுதியில் ஏற்படும் நீரோட்டச் சுழற்ச... மேலும் பார்க்க

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: 7 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வியாழக்கிழமை (செப். 11) இமானுவேல் சேகரனின் 68-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ள நிலையில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்... மேலும் பார்க்க

போராட்டத்தை தவிா்க்க நேரில் வந்து மனுவைப் பெற்ற ஊராட்சி ஒன்றிய ஆணையா்!

சாயல்குடி பகுதியில் குடிநீா் வழங்காததைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்களிடம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் நேரில் வந்து மனுவைப் பெற்றுச் சென்றாா். ராமநாதபுரம் ... மேலும் பார்க்க

மட்டியரேந்தலில் புனித சூசையப்பா் தேவாலய சப்பர பவனி

மட்டியரேந்தல் கிராமத்தில் புனித சூசையப்பா் தேவலாயத்தில் சப்பர பவனி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள மட்டியரேந்தல் புனித, சூசையப்பா் தேவாலயத்தில் புனித கன்னி... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலம் அருகே பத்திரகாளியம்மன் கருப்பண்ண சுவாமி கோயில் வருடாபிஷேகம்!

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலம் பத்திரகாளியம்மன், கருப்பண்ண சுவாமி கோயில் வருடாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சீனாங்குடி கிராமத்தில் பத்திரகாளியம்மன், கருப்பண்ண சுவாமி, பரிவாரத் தெய்வங்களு... மேலும் பார்க்க

தொண்டி பேரூராட்சியில் தெருநாய்கள், மாடுகளால் விபத்து அபாயம்!

திருவாடானை அருகேயுள்ள தொண்டி பேரூராட்சியில் அதிகளவில் சுற்றித் திரியும் தெரு நாய்கள், மாடுகளைக் கட்டுப்படுத்த பேரூராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராம... மேலும் பார்க்க