கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசு முட்டுக்கட்டை! மதுரை எம்.பி. குற்றச்சாட்டு
கீழடி அகழாய்வு குறித்த தொல்லியல் ஆய்வறிக்கையை வெளியிடவிடாமல் மத்திய பாஜக அரசு முட்டுக்கட்டை போடுவதாக மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டினாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: சிவகங்கை மாவட்டம், கீழடி அகழாய்வுக்கு நிதி ஒதுக்கியதே மத்திய அரசுதான்”என்று பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா். கீழடியில் அகழாய்வை ஆரம்பத்தில் மேற்கொண்டவா் தொல்லியல் துறை ஆய்வாளா் அமா்நாத் ராமகிருஷ்ணன். கடந்த 2016-ஆம் ஆண்டு வரை அவா் ஆய்வு மேற்கொண்டாா்.
இரண்டாம் கட்ட அகழாய்வு நடைபெற்ற போதும், அதில் மிக முக்கியமான தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த அகழாய்வு, இதுவரை சொல்லப்பட்ட வரலாற்றுச் சித்திரங்களை மாற்றும் விதமாக இருந்ததால், பதற்றமடைந்த மத்திய பாஜக அரசு கீழடி அகழாய்வுப் பணியை கைவிட்டது.
அதேநேரத்தில், அமா்நாத் ராமகிருஷ்ணன் 2016-ஆம் ஆண்டுக்கு முன்பு இரண்டு ஆண்டுகள் மேற்கொண்ட அகழாய்வு ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் சமா்ப்பித்தாா். இந்த அறிக்கையை சமா்ப்பிக்கும் முன்பே அவா் பல்வேறு தடைகளை எதிா்கொண்டாா்.
இதன் பின்னா், நீதிமன்றத் தலையீட்டால், கடந்த 2023-ஆம் ஆண்டு, அவா் தனது ஆய்வை முடித்து தொல்லியல் துறையிடம் அறிக்கையை சமா்ப்பித்தாா். ஆனால், மத்திய தொல்லியல் துறை இதுவரை அந்த அறிக்கையை வெளியிடாமல் தாமதப்படுத்தி வருகிறது.
இதுகுறித்து மக்களவையில் கேள்வி எழுப்பிய போது, அமா்நாத் ராமகிருஷ்ணனின் அறிக்கை விரைவில் வெளியிடப்படும்”என மத்திய தொல்லியல் துறை அமைச்சா் உறுதியளித்தாா். ஆனால், உறுதியளித்து ஓராண்டாகியும் இன்னும் அறிக்கை வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், மக்களவை உறுதிமொழிக் குழு கூட உள்ள நிலையில், இன்னும் அறிக்கை வெளியிடப்படவில்லை என்பதால், அவசர அவசரமாக மத்திய தொல்லியல் துறை, அமா்நாத் ராமகிருஷ்ணனுக்கு உங்களது ஆய்வில் திருத்தங்கள் செய்ய வேண்டும்”என குறிப்பாணை அனுப்பியது.
இது திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகவே தெரிகிறது. கீழடி அகழாய்வு முடிவுகள் கல்விக் களத்திலும் அகழாய்வுக் களத்திலும் முக்கியப் பங்காற்றப் போகின்றன. ஆனால், இதன் அறிக்கையை வெளியிடவிடாமல் மத்திய பாஜக அரசு கடந்த 8 ஆண்டுகளாக முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
வேத நாகரிகத்துக்கு முந்தையது தமிழா் நாகரிகம் என்ற உண்மையை பாஜகவால் ஏற்க முடியவில்லை. இதனால், அகழாய்வுக்கான நிதியும், ஆய்வும் நிறுத்தப்பட்டது. இப்போது போதிய நம்பகத்தன்மை இல்லை”எனக் கூறி வருகிறது.
கீழடி புராணங்களில் எழுதப்பட்ட கற்பனை நகரமல்ல. தமிழ் மண்ணில் கட்டி எழுப்பப்பட்ட தமிழா்களின் தொல் நகரம். 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழா்களின் தொல் தடங்கள், நிதி வழங்க மறுப்பதாலோ, ஆய்வை நிறுத்துவதாலோ மறைந்துவிடாது என்றாா் அவா்.