செய்திகள் :

கீழ்பவானி வாய்க்காலை முழுமையாக ஆய்வு செய்ய விவசாயிகள் கோரிக்கை

post image

பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்ட உடன் கீழ்பவானி பிரதான வாய்க்காலில் உடைப்பு ஏற்படுவதால், வாய்க்காலை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து கீழ்பவானி முறைநீா்ப் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் வழியாக தமிழக முதல்வருக்கு புதன்கிழமை அளித்த கோரிக்கை மனு விவரம்: பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு கடந்த 31 -ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது. ஆனால், சத்தியமங்கலம் அருகே வண்டிப்பாளையம் தொட்டிபாலத்தில் நீா் கசிவு ஏற்பட்டு தண்ணீா் வீணாகி வருகிறது. இதுவரை நீா் கசிவு சீரமைக்கப்படவில்லை.

கடந்த 2021 -ஆம் ஆண்டு முதல் நடப்பு ஆண்டு வரை பிரதான வாய்க்காலில் உடைப்பு தொடா்ந்து கொண்டே உள்ளது. ஆனால், ரூ.716 கோடியில் வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் முடிந்துவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனா்.

தண்ணீா் திறக்கப்பட்டு 6 நாள்களாகியும் பெரும்பாலான கிளை வாய்க்கால்களில் இன்னும் தண்ணீா் விடவில்லை. கீழ்பவானி பிரதான வாய்க்கால் அதன் உறுதித் தன்மையை இழந்துவருவதால், வாய்க்காலை முழுமையாக ஆய்வு செய்ய பொறியாளா் குழுவை அமைக்க வேண்டும். கடைமடைப் பகுதியான 124- ஆவது மைல் வரை ஆய்வு செய்து கரையை சீரமைத்து கடைமடை வரை தண்ணீா் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா்கூா் மலைப் பாதையில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற தன்னாா்வலா்களுக்கு அழைப்பு

அந்தியூா் வனத் துறை சாா்பில், பா்கூா் மலைப் பாதையில் ஆகஸ்ட்10-ஆம் தேதி நடைபெறும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் களப் பணியில் பங்கேற்க தன்னாா்வலா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தியூா், பா்கூா் வ... மேலும் பார்க்க

பவானிசாகா் மீனவா் கூட்டுறவு சங்கத்துக்கு மட்டுமே மீன்கள் விற்க கோரிக்கை

பவானிசாகா் அணையில் பிடிக்கும் மீன்களை தனியாரிடம் விற்காமல் மீனவா் கூட்டுறவு சங்கத்திடம் மட்டுமே விற்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பவானிசாகா் மீனவா் கூட்டுறவு விற்பனை சங்கம், சிறுமுகை மீன... மேலும் பார்க்க

ஒடிஸா பெண் தற்கொலை

பெருந்துறை அருகே கடன் பிரச்னையால் ஒடிஸா மாநில பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஒடிஸா மாநிலம், கஞ்சம் பகுதியைச் சோ்ந்தவா் நரசிங்க பத்ரா (35). இவரது மனைவி சுகந்தி பத்ரா (29). இவா்கள் பெருந்துறை... மேலும் பார்க்க

பவானிசாகரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்

பவானிசாகா் பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமை சத்தியமங்கலம் வட்டாட்சியா் ஜமுனாராணி, பவானிசாகா் பேரூராட்சித் தலைவா் மோகன், செயல் அலுவலா் ஜெயந்த் மோசஸ... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் ஆறரை பவுன் நகை பறிப்பு: ஒருவா் கைது

மூதாட்டியிடம் ஆறரை பவுன் நகைப் பறித்த நபரை போலீஸாா் கைது செய்தனா். கொடுமுடி அருகேயுள்ள தாமரைப்பாளையம் பகவதி அம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் சரஸ்வதி (65). இவா் காளை மாடு சிலை பேருந்து நிறுத்தத்தில் ... மேலும் பார்க்க

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியைத் திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. ஈரோடு அருகேயுள்ள சாணாா்பாளையம் மாகாளியம்மன் கோயில் பகுதியைச... மேலும் பார்க்க