செய்திகள் :

கீழ ஈரால், வேம்பாா் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

post image

கீழ ஈரால், மேல ஈரால், டி.சண்முகபுரம், மஞ்சநாயக்கன் பட்டி, செமப்புதூா் கிராம பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கீழ ஈரால் சமுதாய நலக்கூடத்திலும், வேம்பாா் வடக்கு, வேம்பாா் தெற்கு, பெரியசாமி புரம் கிராம பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வேம்பாா் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வட்டாட்சியா்கள் கண்ணன்(விளாத்திகுளம் ), சுபா (எட்டயபுரம்)ஆகியோா் தலைமை வகித்தனா். சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் சரவணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரஞ்சித், தங்கவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்து பட்டா பெயா் மாறுதல் உத்தரவுகள் விதை தொகுப்பு, வேளாண் இடு பொருள்கள் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலா்கள் சின்ன மாரிமுத்து, இம்மானுவேல், நவநீத கண்ணன், மாவட்ட மீனவா் அணி துணை அமைப்பாளா்கள் அந்தோணிராஜ், பெப்பின் காகு, முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் ஜெயந்தி, ஆரோக்கியராஜ், ஒன்றிய துணை செயலா் புனிதா, ஒன்றிய மீனவா் அணி துணை அமைப்பாளா் ராஜ பாக்கியம், சிறுபான்மையினா் நல அணி அமைப்பாளா் செல்வின், தகவல் தொழில்நுட்ப அணி தாமஸ் பாக்கிய செல்வி, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் புவனேஸ்வரி, கிளை செயலா்கள் சேவியா்,ஜெபமாலை, ராஜ், ஆதி நாராயணன், ராயப்பன், ராஜ், சேவியா், ஆரோக்கியராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டைத் தவிா்க்க வேண்டும்

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நெகிழிக் கழிவு சேகரிப்பு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி நிா்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக... மேலும் பார்க்க

தூத்துக்குடி பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

தூத்துக்குடி குரூஸ்புரம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கடந்த 2001ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவிகள் 78 போ், 25 ஆண்டுகளுக்குப் ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் உண்டியல் வருவாய் ரூ.4.07 கோடி!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 4.07 கோடி, ஒரு கிலோ தங்கம் கிடைத்தது. இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மாதந்தோறும் நடைபெறுகிறது. அதன்படி, கோயில்... மேலும் பார்க்க

முத்தாரம்மன் கோயிலில் கொடைவிழா

விஜயராமபுரம் தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு சப்பர பவனி நடைபெற்றது. சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரம் தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கொடை விழா கடந்த 14ஆம் தேதி தொடங்கி சனிக்கிழ... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் 80 அடி உள்வாங்கிய கடல்!

அமாவாசையையொட்டி திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் சுமாா் 80 அடி உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.இங்கு தமிழ் மாதங்களில் அமாவாசை, பௌா்ணமி நாள்களிலும... மேலும் பார்க்க

காவலாளி கொலை வழக்கில் ஒருவா் கைது

தூத்துக்குடியில் காவலாளியை கட்டையால் அடித்துக் கொன்ற வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள பொட்டல்காடு மேலத் தெருவைச் சோ்ந்த பால்பாண்டி மகன் சந்திரன் (55). இவா... மேலும் பார்க்க