செய்திகள் :

குஜராத்: லிவ் இன் உறவில் வாழ்ந்த இளம்பெண் மர்ம மரணம்: ஆணவக்கொலை செய்து எரித்ததாக 9 பேர் கைது!

post image

குஜராத் மாநிலம், பனஸ்காந்தா என்ற இடத்தை சேர்ந்த சந்திரிகா(18) என்ற பெண் ஹரேஷ் செளதரி என்பவருடன் கடந்த சில மாதங்களாக லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தார். இருவரும் இதற்காக ஒப்பந்தமும் செய்து கொண்டனர். ஆனால் சந்திரிகாவிடம் அவரது பெற்றோர் தாங்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று கூறி நிர்ப்பந்தம் செய்து வந்தனர். இதையடுத்து தங்களது பெற்றோருக்கு பயந்து சந்திரிகாவும், அவரது பார்ட்னர் ஹரேஷும் சேர்ந்து மத்திய பிரதேசம், ராஜஸ்தானிற்கு சென்றனர். அவர்களை சந்திரிகாவின் உறவினர்கள் தேடி வந்தனர். போலீஸிலும் புகார் செய்தனர். இவரும் இருக்கும் இடத்தை சந்திரிகாவின் பெற்றோர் குஜராத் போலீஸாரின் துணையோடு கண்டுபிடித்தனர்.

இருவரும் ராஜஸ்தானில் உள்ள ஒரு ஹோட்டலில் பதுங்கி இருந்தபோது அவர்களை மடக்கி பிடித்து குஜராத்திற்கு அழைத்து வந்தனர். ஹரேஷ் மீது பழைய ஒரு புகாரில் வழக்கு பதிவு சிறையில் அடைத்தனர். சந்திரிகாவை கட்டாயப்படுத்தி மிரட்டி தனது பெற்றோருடன் செல்வதாக வீடியோ ஒன்றை போலீஸார் எடுத்துக்கொண்டு அவரை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு சென்ற பிறகு அவர்கள் தாங்கள் பார்த்திருக்கும் மணமகனை திருமணம் செய்யவேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்து வந்தனர்.

போலீஸார் ஹரேஷை விடுதலை செய்தவுடன் வெளியில் வந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்தபோது அதில் சந்திரிகாவின் இரண்டு மெசேஜ் இருந்தது. அதில் சந்திரிகா தன்னை வந்து அழைத்து செல்லும்படியும், அப்படி செய்யாவிட்டால் தன்னை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். அல்லது என்னை கொலை செய்துவிடுவார்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து ஹரேஷ் குஜராத் உயர்நீதிமன்றத்தில் சந்திரிகாவை ஆஜர்படுத்த உத்தரவிடக்கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருந்த இரண்டு நாட்கள் இருந்த நிலையில் சந்திரிகா அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். சந்திரிகா இறந்துவிட்டதாக கூறி உறவினர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுக்காமல் பிரேத பரிசோதனை செய்யாமல் அதிகாலையில் உடலை எரித்துவிட்டனர்.

ஹரேஷ் மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது சந்திரிகா இறந்துவிட்டதாக கூறி இறப்பு சான்றிதழை தாக்கல் செய்து மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று பெண் வீட்டார் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து சந்திரிகா ஆணவப்படுகொலை செய்யப்பட்டதாக கூறி மனித உரிமை கமிஷன், டிஜிபி, முதல்வருக்கு ஹரேஷ் விரிவான புகார் ஒன்றை அனுப்பி வைத்தார். அதில் சந்திரிகாவை அவரது தந்தையும் உறவினர்களும் சேர்ந்து படுகொலை செய்து விட்டதாகவும், சந்திரிகாவிடம் தாங்கள் பார்த்திருக்கும் மணமகனை திருமணம் செய்யும்படி கட்டாயப்படுத்தியதாகவும், ஆனால் சந்திரிகா மறுத்துவிட்டதால் உறவினர்கள் சேர்ந்து படுகொலை செய்துள்ளனர்.

இதற்கு போலீஸ் அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். அப்புகாரின் அடிப்படையில் 9 பேரை பிடித்து அவர்களுக்கு இக்கொலையில் உள்ள பங்கு குறித்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து ஹரேஷ் கூறுகையில்,''சந்திரிகாவின் தந்தை இன்னும் தலைமறைவாக இருக்கிறார். நான் விசாரணை குழுவிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளேன். சந்திரிகா எனக்கு அனுப்பிய வாட்ஸ் ஆப் மெசேஜில் தன்னை வந்து காப்பாற்றும்படியும், வராவிட்டால் என்னை கொலை செய்துவிடுவார்கள் என்று மெசேஜ் அனுப்பி இருந்தார். எனவே சந்திரிகாவை அவரது உறவினர்கள்தான் ஆணவக்கொலை செய்துள்ளனர்''என்று தெரிவித்துள்ளார். இருவரும் மே 5ம் தேதியில் இருந்து லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தனர்.

ஊட்டி: ஹோட்டல் குளியலறை சுவரில் ஃபிளாஷ் லைட்; பதறிய பெண்; விசாரணையில் பகீர் தகவல்; என்ன நடந்தது?

ஊட்டியில் கோடை‌ சீசன் நிறைவடைந்திருந்தாலும், தற்போது நிலவி வரும் குளிர்ந்த காலநிலையை அனுபவிக்க அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். கேரளா மாநிலத்தைச்‌‌ சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந... மேலும் பார்க்க

திருப்பூர் எஸ்எஸ்ஐ கொலை வழக்கு: முக்கியக் குற்றவாளி என்கவுன்டர்; இருவர் கைது; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்... மேலும் பார்க்க

இன்ஸ்டாகிராம் காதல், 26 பவுன் நகை பறிப்பு, சுற்றிவளைத்த போலீஸ்; மாணவியை மிரட்டிய கர்நாடக இளைஞர் கைது

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியிடம் இன்ஸ்டாகிராமில் பழகி காதல் வலை விரித்து 26 பவுன் நகைகளை அபகரித்துச் சென்ற லிபின் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர... மேலும் பார்க்க

திருப்பூர்: ரூ.50 லட்சம் கேட்டு வரதட்சணை கொடுமை; தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்; கணவர் குடும்பம் கைது

திருப்பூர் தாராபுரம் சாலை பிரண்ட்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி. பிளீச்சிங் ஆலை நடத்தி வந்த குப்புசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி சுகந்தி. இந்தத் தம்பதியின் ஒரே மக... மேலும் பார்க்க

திருப்பூர் எஸ்.எஸ்.ஐ கொலை வழக்கு: போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் முக்கிய குற்றவாளி உயிரிழப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் அருகே சிக்கனூத்து கிராமம் உள்ளது. அங்கு மடத்துக்குளம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ சி.மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பில், தோட்டப்பராமரிப்புக்காக திண்டு... மேலும் பார்க்க

கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதை மாத்திரை விற்பனை; தஞ்சையில் சிக்கிய கும்பலின் பின்னணி!

தஞ்சாவூர் கீழவாசல் தட்டான்தெரு பகுதியில் இளைஞர்கள் சிலர் மாத்திரையை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் நரம்பில் செலுத்தி போதை ஏற்படுத்திக்கொண்டு வந்துள்ளனர். குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இத்தகைய போதைப்பழக்க... மேலும் பார்க்க