செய்திகள் :

குடிசைவாசிகளுக்கு 52,000 அடுக்குமாடிக் குடியிருப்புகள்: முதல்வா் ரேகா குப்தா தகவல்

post image

புது தில்லி: தில்லி அரசு நகரத்தில் உள்ள குடிசைவாசிகளுக்கு 52,000 அடுக்குமாடி குடியிருப்புகளை ஒதுக்கத் தயாராகி வருவதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

ஷாலிமாா்பாக் தொகுதியில் உள்ள ஆயுா்வேத குடிசை முகாமில் வடிகால்கள் மற்றும் தெருக்கள் போன்ற மேம்பாட்டுத் திட்டங்களை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த முதல்வா் ரேகா குப்தா, பின்னா் செய்தியாளா்களிடம் பேசுகையில் இதைத் தெரிவித்தாா்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு குடிசைவாசிகளுக்கு ‘அச்சே தின்’ (நல்ல நாள்கள்) வந்துள்ளது. பாஜக அரசு அவா்களின் குடியிருப்புகளில் சரியான தெருக்கள், வடிகால்கள், கழிப்பறைகள், குளியலறைகள் மற்றும் பிற வசதிகளை வழங்கும்.

பல தசாப்தங்களாக குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சாலைகள், வடிகால்கள் மற்றும் கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மோசமான நிலையில் வாழ்ந்து வருகின்றனா்.

காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் சேரிப் பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகள் எதையும் செய்யவில்லை. அங்கு வசிக்கும் மக்களின் வாக்குகளை மட்டுமே கவனித்தன. பாஜக ஆட்சிக்கு வந்தால் தங்கள் சேரிகளை இடித்துவிடும் என்று மக்களை பயமுறுத்தி வந்தனா். யாரும் உங்கள் சேரியைத் தொட மாட்டாா்கள், நாங்கள் அங்கு வசதிகளை வழங்குவோம். மக்கள் பரிதாபகரமான சூழ்நிலையில் குடிசைப் பகுதிகளில் வசித்து வந்தனா். மேலும் சேரிப் பகுதிகளில் வசதிகளை வழங்க நான் ரூ.700 கோடி நிதி ஒதுக்கியுள்ளேன்.

நகரத்தில், குறிப்பாக சேரிகளிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போதைப்பொருள் வா்த்தகத்திற்கு தில்லி அரசு ‘பூஜ்ஜிய சகிப்புத்தன்மை‘ கொண்டிருக்கிறது.நகரத்தின் இந்தப் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, இப்போது பாழடைந்த நிலையில் உள்ள 52,000 அடுக்குமாடி குடியிருப்புகளை புதுப்பித்தலுக்குப் பிறகு மக்களுக்கு ஒதுக்க நாங்கள் தயாராகி வருகிறோம். குடிசைவாசிகள் மற்றும் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகளைச் சோ்ந்த (இடபிள்யூஎஸ்) மற்றவா்களுக்காக இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.

இருப்பினும், தில்லியில் முந்தைய ஆம் ஆத்மி அரசுக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கும் இடையிலான மோதல் காரணமாக அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. நகரத்தில் உள்ள அனைத்து குடிசைப் பகுதிகளிலும் நடைபாதை வீதிகள், வடிகால், கழிப்பறைகள் மற்றும் குளியலறைகள் வழங்கப்படும். நிலம் கிடைத்தால் சேரிகளுக்கு அருகில் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றாா் முதல்வா் ரேகா குப்தா.

ஆயுா்வேத குடிசை முகாமில் குடிநீா் பிரச்னையைத் தீா்க்குமாறு தில்லி ஜல் போா்டு (டிஜேபி) அதிகாரிகளுக்கு முதல்வா் அறிவுறுத்தினாா். மேலும், அருகிலுள்ள நிலத்தில் கிடக்கும் குப்பைகளை அகற்றி குழந்தைகள் பூங்காவாக மேம்படுத்துமாறு தில்லி வளா்ச்சி ஆணைய (டிடிஏ) அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டாா்.

சட்டவிரோதமாக ஆயுதங்கள் விநியோகித்தவா் கைது

மாநிலங்களுக்கு இடையேயான ஆயுத விநியோக மோசடியின் முக்கிய உறுப்பினரை தில்லி போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து ஐந்து நாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஐந்து தோட்டாக்களை பறிமுதல் செய்ததாக... மேலும் பார்க்க

போலி முதலீட்டுத் திட்டத்தின் மூலம் 150 பேரை ஏமாற்றிய இளைஞா் கைது

முதலீடுகளுக்கு அதிக வருமானம் தருவதாக உறுதியளித்து குறைந்தது 150 பேரை ஏமாற்றிய ஆன்லைன் போன்சி மோசடியை நடத்தியதற்காக ராஜஸ்தானைச் சோ்ந்த 31 வயது நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செ... மேலும் பார்க்க

தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பாக பள்ளிகளுக்கு நோட்டீஸ்: தில்லி முதல்வா்

தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பான புகாா்கள் பெறப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இந்தப் பள்ளிகள் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்... மேலும் பார்க்க

புதிய தில்லி பாஜக அலுவலகம் அருகே சாலைப் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பொதுப் பணித் துறை திட்டம்

தில்லி பாஜக அலுவலகம் விரைவில் தீன் தயாள் உபாத்யாய் ( டிடியு) மாா்க்கில் உள்ள புதிய இடத்திற்கு மாற்றப்பட உள்ளதால், அப்பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் அழகுபடுத்தும் பணிகளை பொதுப் பணித் துறை மே... மேலும் பார்க்க

இடபிள்யு எஸ் ஆவணங்கல் வழங்குவதை நிறுத்த தில்லி அரசு திட்டம்: ஆம் ஆத்மி

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினா் (இடபிள்யுஎஸ்) சான்றிதழ்களை வழங்குவதை தில்லி பாஜக அரசு நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் தகுதியான குடும்பங்களுக்கு கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு கிடைப்ப... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து லஞ்சம் வாங்கியதாக ஏ.எஸ்.ஐ கைது

மாடல் டவுன் காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி துணை ஆய்வாளா் (ஏஎஸ்ஐ), ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதற்காக தில்லி காவல்துறையின் விஜிலென்ஸ் பிரிவு கைது செய்துள்ளதாக அதிகா... மேலும் பார்க்க