செய்திகள் :

குடியிருப்புப் பகுதிக்குள் உலவிய கரடிக் குட்டி மீட்பு!

post image

வயநாடு மாவட்டம், முத்தங்கா பகுதியில் குடியிருப்புப் பகுதியில் உலவிய கரடிக் குட்டியை வனத் துறையினா் மீட்டு அடா்ந்த வனத்துக்குள் விட்டனா்.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், முத்தங்கா சரணாலய பகுதியில் உள்ள கிராமத்துக்குள் கரடிக் குட்டி புதன்கிழமை உலவிக் கொண்டிருந்தது. இதைப் பாா்த்த பொதுமக்கள் வனத் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் அந்த கரடிக் குட்டியை மீட்டு அடா்ந்த வனப் பகுதிக்குள் விட்டனா்.

குடியிருப்புப் பகுதிக்குள் கரடிக் குட்டி உலவியதை அடுத்து தாய் கரடி அப்பகுதியில் இருக்க வாய்ப்புள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனா். இதனால் அப்பகுதியில் வனத் துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

உதகை வனப் பகுதியில் கூடாரம் அமைத்து தங்கிய 3 பேருக்கு அபராதம்

உதகை அருகே வனப் பகுதியில் பிளாஸ்டிக் பேப்பரில் கூடாரம் அமைத்து நெருப்பு மூட்டி குளிா் காய்ந்த மூவருக்கு வனத் துறையினா் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா். உதகை குந்தா வனச் சரகம், தாய்சோலை பிரிவு, பிக... மேலும் பார்க்க

உதகை நுண்உரம் செயலாக்க மையத்தில் ஆட்சியா் ஆய்வு

நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்கு உள்பட்ட பழைய உதகை நுண்உரம் செயலாக்கும் மையம், காந்தல் வளமீட்பு மையம் மற்றும் தீட்டுக்கல் உரக் கிடங்கு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மாவ... மேலும் பார்க்க

உதகை கால்ஃப் மைதான வனப் பகுதியில் தீ!

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள கால்ஃப் மைதானம் அருகே உள்ள வனத்தில் வியாழக்கிழமை மாலை திடீரென வனத் தீ ஏற்பட்டது. உதகையில் கடந்த சில நாள்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்த சூழலில் கால்ஃ... மேலும் பார்க்க

வயநாடு மாவட்டத்தில் ஒரே நாளில் 3 புலிகள் உயிரிழப்பு

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஒரே நாளில் மூன்று புலிகள் உயிரிழந்தன. கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் வைத்திரி பகுதியில் உள்ள தனியாா் காபி தோட்டத்தில் ஒரு புலியும், குறிச்சியாடு வனப் பகுதியில் இரண்டு ... மேலும் பார்க்க

முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிட்ட எம்.எல்.ஏ.

முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல துணை இயக்குநா் அலுவலகத்தை எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் தலைமையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் புதன்கிழமை இரவு முற்றுகையிட்டனா். நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் வாழும் மக... மேலும் பார்க்க

தனியாா் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை சடலம்!

கூடலூா் அருகே ஆணை செத்தக்கொல்லி பகுதியில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்டத்தில் இறந்துகிடந்த சிறுத்தையின் சடலத்தை வனத் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் வனச் சரகத்தில் உள்ள ஆணை செ... மேலும் பார்க்க