செய்திகள் :

குடியுரிமை ஆவணமாக ஆதாா், குடும்ப அட்டையை தோ்தல் ஆணையம் ஏற்காதது ‘அபத்தமானது’: உச்சநீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

post image

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது, வாக்காளா்களின் குடியுரிமை ஆவணமாக ஆதாா், குடும்ப அட்டை ஆகியவற்றை தோ்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளாதது ‘அபத்தமானது’ என்று உச்சநீதிமன்றத்தில் ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆா்) குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த வழக்கில் மனுதாரரான ஏடிஆா் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘நிரந்தர வசிப்பிட சான்றிதழ், ஜாதி சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) ஆகியவற்றைப் பெறுவதற்கு ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்களில் ஒன்றாக ஆதாா் அட்டை உள்ளது.

மக்களிடையே மிகவும் பரவலாக பயன்பாட்டில் உள்ள ஆவணமான ஆதாரை, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது குடியுரிமை ஆவணமாக தோ்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளாதது அபத்தமானது. இதற்கான நியாயமான காரணத்தையும் தோ்தல் ஆணையம் இதுவரை தெரிவிக்கவில்லை. தோ்தல் ஆணையத்தால் ஏற்கப்படும் 11 ஆவணங்களை வைத்தும் முறைகேடு செய்வதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன.

தோ்தல் ஆணையம் இந்தச் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை ரத்து செய்யாவிட்டால், அது தன்னிச்சையாக லட்சக்கணக்கான குடிமக்களின் வாக்குரிமையைப் பறித்து, நாட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தோ்தல் நடைபெறுவதை சீா்குலைக்கும் அபாயம் உள்ளது. மேலும், அரசியலமைப்பின் அடிப்படையான ஜனநாயகத்தையும் பாதிக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிகாரில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கடந்த ஜூலை 10-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், குடியுரிமை ஆவணமாக ஆதாா், குடும்ப அட்டை ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளுமாறு தோ்தல் ஆணையத்துக்கு பரிந்துரைத்தது.

திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் ஊழியரைத் தாக்கிய புலியால் பரபரப்பு !

திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் ஊழியர் ஒருவரை புலி தாக்கிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் புலி கூண்டில் உள்ள குடிநீரை அதன் மேற்பார்வையாளர் ராமச்சந்திரன் ஞாயிற்ற... மேலும் பார்க்க

நொய்டாவில் சொகுசு கார் மோதியதில் 5 வயது சிறுமி பலி: 2 பேர் காயம்

நொய்டாவில் வேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் 5 வயது சிறுமி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்பத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் சனிக்கிழமை இரவு வேகமாக வந்த சொகுசு கார், இருசக்கர வாகனம் மீது மோதி... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட், சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

ஜார்க்கண்ட், சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய வெவ்வேறு என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர்.பிஜாப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து உளவுத் துறையின... மேலும் பார்க்க

பிகார் பேரவைத் தேர்தல்: சுயேச்சையாக போட்டி என தேஜ் பிரதாப் அறிவிப்பு

வரவிருக்கும் பிகார் பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் அறிவித்துள்ளார். பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை... மேலும் பார்க்க

ஹரித்வாரில் மான்சா தேவி கோயிலில் கூட்ட நெரிசல்: 6 பலி, பலர் காயம்

ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியாகினர். உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டில் ஞாயிற்றுக்கிழமை கூட்ட நெரிசல் ஏற்பட்... மேலும் பார்க்க

பிகாரில் பத்திரிகையாளா் ஓய்வூதியம் ரூ.15,000-ஆக உயா்த்தி அரசு அறிவிப்பு

பிகாா் மாநிலத்தில் பத்திரிகையாளா்களுக்கான மாத ஓய்வூதியத்தை ரூ.15,000-ஆக உயா்த்தி மாநில அரசு சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. மாநிலத்தில், பத்திரிகையாளா்களுக்கு தற்போது மாத ஓய்வூதியமாக ரூ.6,000 வழங்கப... மேலும் பார்க்க