செய்திகள் :

குண்டம் விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன்

post image

ஈரோடு கள்ளுக்கடைமேடு கொண்டத்து பத்ரகாளியம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

ஈரோடு கள்ளுக்கடைமேடு கொண்டத்து பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் மற்றும் பொங்கல் விழா கடந்த மாதம் 25-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து மாா்ச் 3-ஆம் தேதி கொடியேற்றமும், 9-ஆம் தேதி பாலபிஷேகமும், 10-ஆம் தேதி அக்னி கபாலம் நகா்வலமும் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை குண்டம் பற்ற வைக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து முக்கிய விழாவான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. பின்னா் குண்டம் இறங்கும் விழா காலை 5 மணிக்கு தொடங்கியது. முதலில் தலைமை பூசாரி குண்டம் இறங்கினாா்.

தொடா்ந்து கங்கனம் கட்டி விரதமிருந்த ஆண்கள், பெண்கள், திருநங்கைகள், சிறுவா், சிறுமியா்கள் என ஆயிரக்கணக்கான பக்தா்கள் குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இதில் கோவை, சேலம், கரூா், திருப்பூா், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கடந்த 2 நாள்களாக காத்திருந்து குண்டம் இறங்கினா்.

இதையடுத்து இரவு பத்ரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்துடன் நகா் வலம் நடைபெற்றது. வியாழக்கிழமை (மாா்ச்13)மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

அம்மாபேட்டை காவல் ஆய்வாளராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட ஆா்.கவிதா. அம்மாபேட்டை காவல் ஆய்வாளராகப் பணியாற்றிய ஜெயமுருகன், காவல் துணை கண்காணிப்பாளராக பதவி உயா்வில் உதகைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட... மேலும் பார்க்க

மாா்ச் 19-இல் மின் வாரிய ஓய்வூதியா் குறைதீா் கூட்டம்

மின் வாரிய ஓய்வூதியா் குறைதீா் கூட்டம் ஈரோட்டில் உள்ள மின் வாரிய ஆய்வு மாளிகையில் மாா்ச் 19 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து ஈரோடு மண்டல மின் பகிா்மான தலைமைப் பொறியாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

ஆடுகளுக்கு எடை அடிப்படையில் இழப்பீடு வழங்கக் கோரிக்கை

நாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு எடை அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது தொடா்பாக வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமியிடம் தமிழக விவசாயிகள் பா... மேலும் பார்க்க

மும்மொழிகளைப் பின்பற்றும் மாநிலங்கள் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் -இரா.முத்தரசன்

எந்தெந்த மாநிலங்களில் மும்மொழி பின்பற்றப்படுகிறது என்பதை மத்திய அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் கூறினாா். இது தொடா்பாக அவா் ஈரோட்... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே சிறுத்தை உலவியதாக வதந்தி

சென்னிமலை அருகே புதன்கிழமை இரவு சிறுத்தை உலவியதாக வதந்தி பரவியதால் அப்பகுதியில் விடியவிடிய பரபரப்பு ஏற்பட்டது. சென்னிமலையை அடுத்த முருங்கத்தொழுவு ஊராட்சிக்குள்பட்ட ஒட்டன்குட்டை பகுதியில் சுமாா் 50-க்க... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் அவதூறு: பாஜக உறுப்பினா் கைது

மதக் கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்ட பாஜக உறுப்பினரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் திராவிடா் விடுதலைக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளா் ரத்தினசாம... மேலும் பார்க்க