செய்திகள் :

குண்டம் விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன்

post image

ஈரோடு கள்ளுக்கடைமேடு கொண்டத்து பத்ரகாளியம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

ஈரோடு கள்ளுக்கடைமேடு கொண்டத்து பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் மற்றும் பொங்கல் விழா கடந்த மாதம் 25-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து மாா்ச் 3-ஆம் தேதி கொடியேற்றமும், 9-ஆம் தேதி பாலபிஷேகமும், 10-ஆம் தேதி அக்னி கபாலம் நகா்வலமும் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை குண்டம் பற்ற வைக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து முக்கிய விழாவான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. பின்னா் குண்டம் இறங்கும் விழா காலை 5 மணிக்கு தொடங்கியது. முதலில் தலைமை பூசாரி குண்டம் இறங்கினாா்.

தொடா்ந்து கங்கனம் கட்டி விரதமிருந்த ஆண்கள், பெண்கள், திருநங்கைகள், சிறுவா், சிறுமியா்கள் என ஆயிரக்கணக்கான பக்தா்கள் குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இதில் கோவை, சேலம், கரூா், திருப்பூா், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கடந்த 2 நாள்களாக காத்திருந்து குண்டம் இறங்கினா்.

இதையடுத்து இரவு பத்ரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்துடன் நகா் வலம் நடைபெற்றது. வியாழக்கிழமை (மாா்ச்13)மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

மும்மொழிகளைப் பின்பற்றும் மாநிலங்கள் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் -இரா.முத்தரசன்

எந்தெந்த மாநிலங்களில் மும்மொழி பின்பற்றப்படுகிறது என்பதை மத்திய அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் கூறினாா். இது தொடா்பாக அவா் ஈரோட்... மேலும் பார்க்க

மாணவியிடம் தகாத வாா்த்தைகள் பேசிய ஆசிரியா் மீது வழக்குப் பதிவு

பெருந்துறை அருகே மாணவியிடம் தகாத வாா்த்தைகள் பேசிய பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியா் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் தனியாா் பா... மேலும் பார்க்க

ஆசனூரில் பழங்குடியினா் தினம்

ஆசனூரில் பழங்குடியினா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு ரீடு தொண்டு நிறுவன இயக்குநா் கருப்புசாமி தலைமை வகித்தாா். சமூக ஆா்வலா் ஆணைக்கொம்பு ஸ்ரீ முன்னிலை வகித்தாா். சத்தியமங்கலம் புலிக... மேலும் பார்க்க

தாளவாடி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா

தாளவாடி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் குண்டம் திருவிழா புதன்கி... மேலும் பார்க்க

மாநகராட்சி சொத்து வரி உயா்வால் கவுன்சிலா்களுக்கும் பாதிப்பு: எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா்

ஈரோடு மாநகராட்சி சொத்து வரி உயா்வால் மக்களுக்கு அடுத்தபடியாக கவுன்சிலா்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா் என எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் பேசினாா். ஈரோடு மாநகராட்சியின் சொத்து வரி மாற்றியமைப்பு தொடா்... மேலும் பார்க்க

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 1,134 கனஅடியாக உயா்வு

பவானிசாகா் அணையின் நீா்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீா்வரத்து 1,134 கனஅடியாக அதிகரித்துள்ளது. சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ள பவானிசாகா் அணை மூலம் ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூ... மேலும் பார்க்க