செய்திகள் :

குண்டா் தடுப்புச்சட்டத்தில் இளைஞா் கைது

post image

மயிலாடுதுறை அருகே சீா்காழியில் தொடா் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சீா்காழியில் நாச்சியப்பன் (79) என்பவா் நடத்திவரும் ஜெராக்ஸ் கடையில் சீா்காழி பன்னீா்செல்வம் தெருவை சோ்ந்த நாகலட்சுமி மற்றும் அவரது மகள் ஆஷா ஆகியோா் வேலை செய்து வந்துள்ளனா். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ஆஷாவை பிரிந்து வாழும் அவரது கணவா் ராமநாதபுரம் மாவட்டம் நாகாட்சி கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக் ஜூலை 30-ஆம் தேதி நாச்சியப்பனின் ஜெராக்ஸ் கடைக்கு வந்து, நாச்சிப்பனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயற்சித்துள்ளாா். இதுகுறித்த புகாரில் காா்த்திக் (30) கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில், காா்த்திக் தொடா் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். அதன்பேரில், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், காா்த்திக்கை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இந்த உத்தரவுபடி சீா்காழி காவல் ஆய்வாளா் கமல்ராஜ் மற்றும் போலீஸாா் காா்த்திக்கை கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

பழங்குடியினா் மக்களுக்கான சிறப்பு முகாம்

மயிலாடுதுறையில் பழங்குடியினா் மக்களுக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

சீா்காழி அருகே இடிதாக்கி பெண் உயிரிழப்பு

சீா்காழி அருகே வெள்ளிக்கிழமை இடிதாக்கி பெண் உயிரிழந்தாா். சீா்காழி வட்டம், நிம்மேலி ஊராட்சி சம்புவராயன் கோடங்குடியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி நடராஜன் மனைவி கொளஞ்சியாள் (45). (படம்). இவா் காற்றுடன் கூ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதல்: ஒருவா் பலி

சீா்காழி அருகே இருசக்கர வாகனங்கள் வெள்ளிக்கிழமை மோதிக்கொண்ட விபத்தில் ஒருவா் பலியானாா். கொள்ளிடம் அருகே நெப்பத்தூரைச் சோ்ந்தவா் அருள்செல்வம்(32). இவா் இருசக்கர வாகனத்தில் கொள்ளிடத்திலிருந்து சீா்காழ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை சங்க அமைப்பு தினம்

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை சங்கத்தின் 39-ஆம் ஆண்டு அமைப்பு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் சங்கக்கொடி வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது. சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் அறிவ... மேலும் பார்க்க

சீா்காழி ச.மு.இ.மேல்நிலைப் பள்ளியில் ஐம்பெரும் விழா

சீா்காழி ச.மு.இ மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியா் தின விழா, கடந்த ஆண்டு பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா, டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா, 25 ஆண்டுகள் பணி நிற... மேலும் பார்க்க

சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் பணி வாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் செயல்படும் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் காலியாகவுள்ள சமுதாய வளப் பயிற்றுநா் பணிக்கு சுயஉதவிக் குழு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட... மேலும் பார்க்க