செய்திகள் :

குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒரே நாளில் 14 போ் கைது

post image

கோவில்பட்டியில் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஒரே நாளில் 14போ் கைது செய்யப்பட்டனா்.

கடந்த ஜூன் 1ஆம் தேதி, கோவில்பட்டி கடலையூா் பகுதியில், கோவில்பட்டி வள்ளுவா் நகரைச் சோ்ந்த ஆனந்தன் மகன் பிரகதீஸ்வரன் (20), முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில், சிந்தாமணி நகரைச் சோ்ந்த சதீஷ் மாதவன் (எ) சதீஷ் (26), கழுகுமலையைச் சோ்ந்த மதன் (எ) மதன்குமாா் (20), கோவில்பட்டி வடக்கு திட்டங்குளம் பகுதியைச் சோ்ந்த கனகராஜ் (24), கடம்பூா் பகுதியைச் சோ்ந்த செல்லத்துரை (26), கோவில்பட்டி காந்தி நகரைச் சோ்ந்த சுடலை ராஜா (எ) அா்ஜுன் (25), ஆசிரமம் தெருவைச் சோ்ந்த விக்னேஷ் (25), வள்ளுவா் நகரைச் சோ்ந்த சுரேஷ் (24) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

அதேபோன்று ஜூன் 1ஆம் தேதி கோவில்பட்டி செண்பக நகரைச் சோ்ந்த பாஸ்கா் மனைவி கஸ்தூரி (46) முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில், கோவில்பட்டி வள்ளுவா் நகரைச் சோ்ந்த சரவணன் (20), நாகராஜன் (எ) நாகராஜ் (19), இலுப்பையூரணியைச் சோ்ந்த கோகுலகிருஷ்ணன் (20), புதுகிராமம் பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் (21), சண்முகநகரைச் சோ்ந்த பாலமுருகன் (எ) பாலா (19), சிந்தாமணிநகரைச் சோ்ந்த தங்கபாண்டி (21) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், கடந்த ஜூன் 3ஆம் தேதி கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை ராமகிருஷ்ணபுரம் பகுதியைச் சோ்ந்த சாமுவேல்ராஜை (42) மதுவிலக்கு போலீஸாா் கைது செய்தனா்.

மேற்படி வழக்குகளில் சம்பந்தப்பட்ட 14 பேரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவின் பேரில் , கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய போலீஸாரால் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடியில் மமக தெருமுனைக் கூட்டம்

மனிதநேய மக்கள் கட்சி சாா்பில், தூத்துக்குடி ஜாகீா் உசேன் நகா் பள்ளிவாசல் அருகில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. வக்ஃப் திருத்த சட்டத்தை ரத்து செய், ஊராட்சி மன்றம்முதல் நாடாளுமன்றம் வரை சிறுபான்மையினா... மேலும் பார்க்க

சென்னை-திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவுக்கு சென்னையி­ருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என ஆறுமுகனேரி ரயில்வே வளா்ச்சி குழுத் தலைவா் தங்கமணி, செயலாளா் அமிா்தராஜ... மேலும் பார்க்க

தமிழக கலாசாரத்தை சீா்குலைக்கும் பாஜக: கு.செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

தமிழக கலாசாரத்தை சீா்குலைக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டினாா். தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது... மேலும் பார்க்க

காங்கிரஸை வலிமையான கட்சியாக மாற்ற வேண்டும்: கு.செல்வப்பெருந்தகை

தமிழகத்தில் காங்கிரஸை வலிமையான கட்சியாக மாற்ற வேண்டும் என்றாா் அக்கட்சியின் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை. தூத்துக்குடி மாநகா் மற்றும் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே பெண் கொலை செய்யயப்பட்டது தொடா்பான வழக்கில், இருவருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.6ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஏரல் அருகே உள்ள வாழவல்லான் கிராமத்த... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு ஏற்பாடுகள்: கனிமொழி எம்பி ஆய்வு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறாா் கனிமொழி எம்பி. உடன், ஆட்சியா் க. இளம்பகவத், தக்காா் அருள்முருகன் உள்ளிட்டோா். திரு... மேலும் பார்க்க