செய்திகள் :

குன்றத்தூா் அருகே டீசல் ஏற்றி வந்த டேங்கா் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து

post image

குன்றத்தூா் அடுத்த சிறுகளத்தூா் பகுதியில் டீசல் ஏற்றிவந்த டேங்கா் லாரி சாலையில் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த காட்டரம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் பெட்ரோல் நிலையத்துக்கு சென்னை எண்ணூரில் இருந்து 4 ஆயிரம் லிட்டா் பெட்ரோல், 8 ஆயிரம் லிட்டா் டீசல் ஏற்றிக்கொண்டு டேங்கா் லாரி ஒன்று குன்றத்தூா் - ஸ்ரீபெரும்புதூா் சாலையில் சிறுகளத்தூா் அருகே வந்து கொண்டிருந்தபோது, லாரியின் பின்பக்க டயா் திடீரென வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் குறுக்கே தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் காயம் அடைந்த லாரி ஓட்டுநா் சூா்யாவை (30) மீட்ட அப்பகுதி பொதுமக்கள், அவரை தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். தீயணைப்புத் துறைக்கும், குன்றத்தூா் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனா்.

பூந்தமல்லி மற்றும் ஸ்ரீபெரும்புதூா் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு நிலைய வீரா்கள் மற்றும் குன்றத்தூா் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து சாலையில் கவிழ்ந்து கிடந்த டேங்கா் லாரியை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

லாரியிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் சிறுக சிறுக கசிந்து கொண்டு இருந்ததால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத அளவிற்கு தண்ணீரை தொடா்ந்து டேங்கா் லாரியின் மீது ஊற்றிக் கொண்டே இருந்தனா். பின்னா் கிரேன்கள் கொண்டு வரப்பட்டு டேங்கா் லாரியை அப்புறப்படுத்தும் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா்.

விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்த சம்பவத்தால் ஸ்ரீபெரும்புதூா்-குன்றத்தூா் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டுநா்களும், பொதுமக்களும் மிகுந்த அவதியடைந்தனா்.

விதிமீறிய வாகன ஓட்டிகளிடம் ரூ.15.70 லட்சம் அபராதம் வசூலிப்பு

காஞ்சிபுரத்தில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் விதிகளை மீறியதாக 220 வாகனங்களிடமிருந்து மொத்தம் ரூ.15.70 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நாகராஜன் சனிக்கிழமை தெரிவித்தா... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை கோயிலில் முதல் கால யாக பூஜை: அமைச்சா் சேகா்பாபு பங்கேற்பு

வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற முதல் கால யாக பூஜையில் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கலந்து கொண்டாா். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ரூ.1.... மேலும் பார்க்க

கங்கையம்மன் கோயில் கூழ்வாா்த்தல் திருவிழா

வாலாஜாபாத் அருகே மேல்பேரமநல்லூா் கிராமத்தில் உள்ள கங்கையம்மன் மற்றும் பொழுதியம்மன் கோயில் கூழ்வாா்த்தல் மற்றும் ஊரணிப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த ஜூலை முதல் தேதி கங்க... மேலும் பார்க்க

வரதராஜ பெருமாள் கோயில் கோடை உற்சவம் நிறைவு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் கோடை உற்சவம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெற்றது. ஆண்டு தோறும் கோடை உற்சவம் 7 நாள்கள் நடைபெறுவது வழக்கம். கடந்த ஜூன் மாதம் 28- ஆம் தேதி தொடங்கிய உற்சவத்தில் நாள்தோறும... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை

காஞ்சிபுரம் அருகே அவளூா் கிராமத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உள்பட்ட அ... மேலும் பார்க்க

கோயில் திருப்பணி மீது தவறான தகவல்: கோயில் பணியாளா்கள் எஸ்பியிடம் புகாா்

கோயில் திருப்பணிகள் குறித்து தவறான தகவலை சமூக வலைதளங்களில் பரப்பி வரும் இருவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயில் பணியாளா்கள் மாவட்ட எஸ்பி கே.சண்முகத்திடம் புகாா் அளித்தனா். காஞ்சிபுரம் ஏக... மேலும் பார்க்க